வெள்ளி, ஏப்ரல் 23

அன்னையர் தினம்

அன்னையர் தினம்















அன்னையர் தினம் வருடா வருடம் கொண்டாடுகிறோம். எதற்காக? , நம்மை ஈன்றவரை வருடம் பூரா நினைக்கிறோமோ இல்லையோ அன்று ஒரு நாளாவது நினைக்கட்டும் என்று தான் நினைக்கிறேன் .என்ன நான் சொல்வது சரிதானே !கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் வெட்கமாக இருக்கிறது .

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ,ஆலயம் தொழுவது சாலவும் சிறந்தது",என்று முன்னோர்கள் சரியாகத் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் .நமது தாய் நமக்கு என்ன செய்யவில்லை!

தான் தாய் ஆகிவிட்டோம் என்றவுடன் தனக்காக இல்லாவிட்டாலும் தன சிசுவுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்கிறாள் .தன உணவு முதல் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு விடுகிறாள் .

எனக்குத் தெரிந்த ஒருவர் ,தன சொத்துக்களை எல்லாம் கொடுத்த தாயை , "நீ எப்போது சாவாய் ,நான் எப்போது சொத்தை பெறுவது " என்று எல்லாம் இகழ்ந்து பேசி இருப்பதை கேட்டிருக்கிறேன் . இவ்வளவு இகழ்ந்து பேசிய மகனை மகனை அந்தத் தாய் மன்னித்து தான் இருக்கும் போதே சொத்துக்களை எழுதி வைத்தது எனக்குத் தெரியும் .

பீகாரில் உள்ள ஒரு இடத்தில் இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மரபு.

தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ,தந்தைக்கு,முன்னோர்களுக்கு,தாய்க்கு என்று பலருக்கும் சாத் உருண்டைகளை வைப்போம் .மற்றவர்களுக்கு வைப்பதை விட தாய்க்கு அதிகமான உருண்டைகள் வைக்கச் சொல்வார்கள் .மேலும் ஒவ்வொரு உருண்டைக்கும் ,தாய் கர்ப்ப காலத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை சிரமப்பட்டதை சொல்லிச்சொல்லி சாத் உருண்டைகளை வைக்க சொல்லும் போது கண்களில் நீர் சொறியும் .அவ்வளவு பவித்திரமானது தாய் உறவு என்றால் பாருங்கள் .

வெவ்வேறு காலக் கட்டங்களில் பல அவதாரங்கள் கடவுள் எடுத்திருக்கிறார் என்றால் ,கலிகாலத்தில் கடவுள் தாயைப் படைத்துள்ளார் போலும்.

அந்த வகையில் இந்த வருடம் வரும் may 9 ம தேதி அன்னையர் தினம் .அன்று மட்டும் அல்லாமல் எல்லா நாட்களும் அன்னையரை நினைவிற் கொள்வோம் .எல்லா அன்னையருக்கும் நம் வணக்கத்தைச் செலுத்துவோம்

ஆங்கிலத்தில் MOTHER என்ற சொல்லுக்கு கவிதை ஒன்றினைக் கீழே கொடுத்துள்ளேன். மிகச்சரியாக உள்ளது இல்லையா!

MOTHER

"M" for million things she gave for me

"O" means she is growing old

:T" the tears she shed to save me

:H" the heart of purest gold

:E" for her eyes with love light shining

"R" for the right,right she always be

put them all together in one word they spell "MOTHER"
" a word that means a world to me"








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக