ஞாயிறு, ஏப்ரல் 15

புண்டரீகர் என்ன செய்தார்?

ஸ்தல சயன பெருமாள் 2ஸ்தல சயனப் பெருமாள் கோயில்

புண்டரீகர் என்ன செய்தார்?
புண்டரீகர் திருக்கடல்மல்லை அதாவது மகாபலிபுரம் என்ற ஊரில் இருந்தார். அவர் பெருமாள்
கடலில் (திருப்பாற்கடலில்) பள்ளிகொண்டு இருக்கிறார் என்ற நினைப்பில் நேரே கடலுக்குப்
போனார், தான் கையையே கொட்டாங்குச்சியைப் போல் செய்து கொண்டு கடல் நீர் முழுவதையும்
எடுத்து கரையில் கொட்ட ஆரம்பித்தார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் இவர் என்ன செய்கிறார் என்று,
"புண்டரிகரே, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று வினவினர்.
அவரும் " பெருமாள் கடலில் சயனித்து கொண்டிருக்கிறார் இல்லையா, அதனால் எல்லா
நீரையும் வெளியே எடுத்துக் கொட்டிவிட்டு அந்த சயனக் கோலத்தைப் பார்க்க ஆசைப் பட்டு
இதனை செய்து கொண்டிருக்கிறேன்", என்று பதில் கூறினார்.
இதனைக் கேட்டவுடன் மக்களுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இப்படிக் கூட
கலங்குவார்களா? ஆனால் கலங்கினால்தான் பக்தி. நாமெல்லாம் தெளிவாக உள்ளோம்.
இதேபோல உதாரணம் மற்றொன்று உண்டு.
மகாபாரதத்தில் கண்ணன் விதுரரின் குடிசைக்கு வருகிறான். விதுரர் எல்லாம் நன்றாக உள்ளதா
ஒருதடவைக்கு இருதடவை சரி பார்க்கிறார். கண்ணன் உட்காரும் ஆசனப்பலகையை நன்றாகத்
துடைத்து விட்டு, பலதடவை கையால் தடவிப் பார்க்கிராறாம்.
பாரதம் எழுதிய வியாசர், இந்த பக்தியை நினைந்து வியக்கிராராம்! 
இவர் வீடு, இவர் மனை. எதற்காக தடவித் தடவிப் பார்க்கவேண்டும்?
இவர் இருப்பது துரியோதணன் வீட்டில்,  அவன் கொடுக்கும் சோற்றைத் தான் இத்தனை நாள்
சாப்பிட்டுஉள்ளார். அவன் என்ன செய்தான், பள்ளம் வெட்டி அர்ச்சுனன் போன்றவர்களை சிறை
பிடிக்கப் பார்த்தான், பொய் ஆசனம் இட்டு கண்ணனைப் பிடிக்கப் பார்த்தான், அதேபோல
எங்காவது தனக்குத் தெரியாமலேயே ஆசனத்தில் முள் வைத்து இருப்பேனோ? என்ற நினைப்பில்
தான் பலதடவை ஆசனத்தை தடவிப் பார்த்தார்.
அவ்வளவு பக்தி கண்ணன் மேல்!
அது போலத்தான் புண்டரிகர்!!
ஆதிசேஷன் மேல் சயனத்திருந்த பெருமாள் யோசித்தார். இவருக்கு காட்சி கொடுப்பதென்று.
"ஆம், உள்ளே இருந்தால் எப்போது இவன் என்னை சேவிப்பான்? நேரமில்லை, உடனே
புறப்படுவோம்". எல்லாவற்றையும் மறந்தார்,

ஆம் ஆதிசேஷனையும் தான்.
நேரே வந்து தரையில் படுத்துக் கொண்டு புண்டரிகருக்குக் காட்சி அளித்தார்.
அதனால்தான் ஸ்தல சயனப் பெருமாள் என்று பெயர். திருக்கடல் மல்லை பெருமாள்
"ஸ்தல சயன[ பெருமாள்"  எனப்படுவார்.
பெருமாள் 27 திவ்ய தேசத்தில் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

ச்தலசயனப் பெருமாள்பெருமாள் புன்டரிகருக்கு காட்சி
அவற்றில் ஆதிசேஷன் இல்லாமல் நிலத்தில் ஸ்தல சயனப் பெருமாளாக ( தரை கிடந்தான்)
சேவை சாதிக்கும் தலம். மனித உருவில் வந்ததால் சங்கு சக்கரங்களும் இல்லை,
ஸ்ரீதேவி , பூதேவியும் நாபியில் இருந்து பிரம்மனும் இல்லை. புண்டரீக முனிவர் சமர்பித்த
ஆயிரம் இதழ் தாமரையில் திருவடிகளை வைத்த வண்ணம் சேவை சாதிக்கின்றார்
பெருமாள்.
ஆதி சேஷன் இல்லாமல் தரையில் நான்கு திருக்கரங்களுடன்,
வலத் திருக்கரத்தை திருமார்பில் ஞான முத்திரையாக, கிழக்கு நோக்கிய திருமுக
மண்டலத்துடன், ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு பெருமாள் சேவை
சாதிக்கின்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக