திங்கள், செப்டம்பர் 24

பெய்யனப் பெய்யும் மழை

பெய்யனப் பெய்யும் மழை
அந்தக் காலத்தில் வாசுகி அம்மையார், அதாங்க திருவள்ளுவர் மனைவி, சொன்ன சொல் நடக்குமாமே, ராட்டினத்தில் குடத்தைக் கட்டி
கிணத்திலிருந்து தண்ணீர் எடுக்கும் பொது, வள்ளுவர் கூட்டார்ன்னு அப்படியே விட்டுட்டு வந்தாங்களாம் ,அவங்க திரும்பி வர வரைக்கும்
குடம் அந்தரத்திலே நின்னுக்கிட்டு இருந்ததாம்.பதிவிரதை சொல் அப்படியாம்.
இப்ப அப்படி யாரும் இருக்காங்களோ என்னவோ தெரியலே,ஆனா அமெரிக்கா வானிலை ஆரராய்ச்சிக் காரங்க சொன்னா பதிவிரதை
கணக்கா நடக்குதுன்னா பாருங்க?
என்னய்யா பிடிகை எல்லாம் பிரமாதமா இருக்குங்கிறிங்களா?
ஆமாங்க, அமெரிக்காவில வாழற தமிழ் மக்கள் எல்லாம் சேர்ந்து தமிழ் வகுப்பு நடத்தறாங்க.நல்லது தான் பண்ணறாங்க.
நான் சென்ற வாரம் என் பெண்ணுக்கு உபகாரம்செயலாம்னு (உபகாராமா இல்லை உபத்திரவமா என்பது அவங்க சொல்லனும்)வாஷிங்டன் பக்கத்துலே உள்ள மேரி லன்ட் வந்தேன். நான் அமேரிக்கா போய் இருக்கேன் என்பதை எப்படி எல்லாருக்கும் தெரிவிக்கிறது! அங்க ஒரு சனிக்கிழமை தமிழ் வகுப்புக்கு போனோம். நான் தமிழ் கத்துக்க இல்லை, என் பேத்திக்குத தான், தமிழ் சொல்லித்தர.சும்மாசொல்லக் கூடாது பொறுப்பாச் சொல்லித் தராங்க.அடுத்த நாள் ஒரு சுற்றுலா எல்லாரும் போற மாதிரி ஏற்பாடு செய்து இருந்தார்கள். மாலை நாலு மணிக்கு என்று முன்னர் திட்டமிட்டு இருந்தார்களாம், ஆனால்,வானிலை ஆராய்ச்சியைப் பார்த்துவிட்டு அந்த நேரத்தில் மழை வரும் என்று சொல்லி உள்ளார்கள், அதனால் நாம் ஒரு மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று திட்டத்தை மாற்றினார்கள்.
நான் சொன்னேன்,"மழைவரும் என்று தானே சொல்லி உள்ளார்கள், நம்மூரில் போல வந்தாலும் வரலாம், வராமல்போனாலும் போகும், எதுக்காக நேரத்தை மாற்றனும்"
என் பெண், "அப்படியில்லப்பா, இங்க சொன்னா சொன்ன மாதிரி நடக்கும், அப்படி சரியாச் சொல்லுவாங்கப்பா" என்றாள்.
எனக்கு நம்பிக்கை இல்லை.
மறுநாள் .
"அப்பா என்ன நன்றாக இருந்ததா. சுற்றுலா, கிளம்புவோமா", என்றாள் என் பெண்.
"ஏம்மாஅதுக்குள்ளே" என்றேன் நான்.
மழை வரும் போலே இருக்கு அப்பா".
அதுவரை அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்த,நான்,
"என்ன மழை வரப்போகுதா? நிஜமாத்தான் சொல்லறே? மணி நாலு ஆகப்போகிறதா?"
"ஆமாப்பா, மணி நாலு ஆகப் போகுது, மழை வரத்துக்கு முன்னால வீட்டுக்கு .போகலாம்" என்றாள்
அப்பத்தான் நினைத்துக் கொண்டேன், அந்தக் காலத்தில் பதிவிரதைகள் "மழை பெய்' என்று சொன்னால் பெய்யுமாம், அது போல இந்தக் காலத்தல் அமெரிக்கா வானிலை ஆராய்ச்சியாளர்கள் தான் பதிவிரதைகள் போலும்.
அப்ப நாம் ?