திங்கள், டிசம்பர் 31

நாம் எங்கிருந்து வந்தோம்?




நாம் எங்கிருந்து வந்தோம்?
எங்கே போகப்போகிறொம்?
உலகம் 2012ல் அழியும்ன்னு சொன்னார்களே, ஏன் அழியவில்லை?
எப்போ அழியும்?
நம்மைப் போல வேறு கிரஹங்களில் எங்கும் மக்கள் இருக்கிறார்களா?
பறவை பறப்பதைப் பார்த்தல் நமக்கு என்ன தோணும்? ரைட் சகோதர்களுக்கு
என்ன தோணியது?
விமானங்கள் எப்படி பறக்கின்றன? என்ன தத்துவம்?
ராக்கெட் எப்படி ஏவுகிறார்கள்?
ஒண்ணுமில்லெ ஒரு சின்ன விஷயம், ராக்கெட்டில் எப்படி தங்கள் காலைக் கடன்களை கழிக்கிறார்கள்?
இப்படி சின்ன விஷயங்களில் இருந்து பெரிய விஷயங்கள் வரை விடை
தெரியணுன்னா, இங்கே போனால் தெரிந்து கொள்ளலாம்.
எங்கேன்னு கேட்பது காதுலெ விழறது.
கொஞ்சம் பொறுங்க!
அதுக்கு முன்னாலே மேலே சொன்னதுக்குக்கெல்லம் என்ன பதில்ன்னு
தெரிஞ்சுப்போம், என்ன நான் சொலறது சரிதானே?
உலகம் 2012ல் அழியும்ன்னு ஏக அமர்க்களம் பண்ணாங்கள்ள! இவங்களைப் போய் கேட்டா என்ன சொல்றாங்க
தெரியுமா?
நாம இருக்கிறது பால் வெளி மண்டலமாம். அத போட்டோ பிடித்து போட்டு இருக்காங்க. படம் பாருங்க!

அத ஒரு ஸ்கேல் நீளன்னு வச்சுப்போம். அதுலெ நாமெ இருக்கற சூரியக் குடும்பத்தை பேனாவால ஒரு புள்ளி
வைங்க. அந்தப் புள்ளிலே, சூரீயன், ஒன்பது கிரஹங்கள் நம்ம இருக்க்ற பூமி உள்பட, நட்சத்திரங்கள், எறிகற்கள்
எல்லாத்தையும் ஒரு புள்ளிலெ அடக்கிடலாமாம்!!! அப்ப்டின்னா அந்தப் புள்ளிலெ நீங்க எங்கே, நான் எங்கே?
அப்ப்டி இந்த மாதிரி பல பால்வெளி மண்டலங்கள் இருக்காம். இவை எல்லாம் உருவாக பல கோடி மில்லியன்
வருஷ்ங்கள் ஆச்சாம். அதே போல் அழியறதுக்கும் பல கோடி வருஷங்கள் ஆகுமாம். அதனாலெ கவலைப்
படாதிங்க, வாழ்க்கையை மகிழ்ச்சியா கொண்டாடுங்க. என்ன சரியா?
அதப் போல, நம்மைப் போல அல்லது நம்மை விட சிறந்தவங்க வேற கிரஹத்துல யாராவது இருக்காங்களான்னு
(அஙக எதாவது அழற தொடர் எதாவது ஒளி பரப்பறாங்களான்னு கேட்காதீங்க) ஆராய்ச்சி பண்ணறதுக்குன்னு ஒரு
விண்கலம் அனுப்பி இருக்காங்களாம். அதப் பத்தி விவரமா இந்த இடத்துலெ காண்பிச்சு இருக்காங்க.
தினம் நாமும் பறவைகள் பறப்பதை பார்க்கிறோம், என்னிகாவது யோசிச்சுறொப்போமா, அதெல்லாம் எப்படி
பறக்குதுன்னு?

ரைட் சகொதரர்கள் வீடு
அதெப்படி சார், ரைட் சகோதரர்களுக்கு மட்டும் நாமும் அப்படி பறக்கணும்ன்னு தோணிச்சு!
ரைட் சகோதரகள் விட்ட முதல் விமானம்

அதுதாங்க தனி மூளைங்கறது! அப்படி தோனினது நல்லதுக்குத் தான். ஆமாங்க, 
அவங்க கஷ்டப்பட்டதாலதான்
நம்ம ஜாலியா விமானத்துலெ பறக்க முடியுது!
அவ்ஙக எவ்வளவு கஷ்டப் பட்டாங்கங்கறதை பார்த்தா நாமல்லாம் ஒண்ணுமே பண்ணலீங்க.
அதப் போய் பார்க்கணும்!!!!

விமானம் பறக்கணும்ன்னா என்னன்ன விஷயம் முக்கியம்ன்னு நன்னா விளக்கி இருக்காங்க. விமானி உக்காந்து ஒட்டற
இடத்தை நாம பாக்கறமாதிரியும், பல பெரிய விமானங்களையும் அப்படியே பறக்கர மாதிரியே தொங்க விட்டு

இருக்காங்க. பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் இதுங்க.
விமானத்தைப் போலவே ராக்கெட் எப்படி விடறதுன்னும் விளக்கமா போட்டோக்களோட வச்சு இருக்காங்க.

  sky labன்னு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உள்ளே எப்படி இருக்கும்ன்னு பாருங்கன்னு காட்டறாங்க.
முக்கியமான விஷயம் என்னன்னா, விண்வெளில நாம தட்டு, இலையெல்லாம் போட்டுண்டு சாப்பிடற மாதிரி
முடியாதாம். அதெ விட மலஜலம் எப்படிக் கழிப்பாங்கன்னு, ஒண்ணு விடாம யோசிச்சு வச்சுருக்காங்க பாருங்க,

 
விண்வெளியில் எப்படி மலஜலம்  கழிப்பார்கள்

நம்ம வடிவேலு சொல்லற மாத்ரி ரூம் போட்டு யோசிச்சு இருக்காங்க சார்!!
எல்லாத்தையும் விட பூமியை வெவ்வேறு துணைக்கோள்கள் எப்படி போட்டோ எடுத்து நிமிஷத்துக்கு நிமிஷம்
நமக்கு அனுப்பி நாம எப்படி அதுக்குத் தகுந்த மாதிரி நாம வாழ்க்கையை மாத்திக்கணும் என்பதையெல்லாம்
சொல்லாம சொலறாங்க பாருங்க அதையெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கலாம்.

இன்னும் நான் சொல்லாம விட்டது நிறையங்க!!!
இன்னைக்கெல்லாம் பாத்துகிட்டே இருக்கலாம். ஒருநாள் போறாதுங்க!!!
அது சரிங்க, இதெல்லாம் இங்கேன்னு கேக்கிறிங்களா?
வாஷிங்ட்ன் ஸ்மித்சோனியன் விண்வெளி ஆராய்ச்சி பற்றிய அருங்காட்சியகம் வாஷிங்டன் டீ.சி. அப்படிங்கறது
தான் அவங்களொட முகவரி. ஒரு தடவை போய் பார்த்துட்டு வாங்க.
(smithsonian national air and space museum, washinton D.C.)
அவ்ஙக்ளொட இணைய தள முகவரி http://www.si.edu/


புதன், டிசம்பர் 26

வெங்காயத்தை வச்சு என்ன பண்றது?

சூப்பும் கண்மனிகளாக வெங்காயம்

கண்ணில் நீர் வரவழைக்கும் பொருள்.
கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வைக்கும் மணமகளிடம்,
“என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன், என் பையன் கண்ணில்
நீ வராமல் பார்த்துக் கொள்வது உன் கையில் தான் இருக்கு”,
பையனின் தாயர்ர் சொல்கிறார்.
“கவலைப் படாதீங்க, அவர் வெங்காயம் உறிக்கும் போது மட்டும் கண்ணில் நீர் வருவதை என்னால் தடுக்க என்னால் முடியாது, அம்மா” என்கிறாள் மணமகள்.
இது எல்லா வீடுகளிளும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சி.
ஆமாம், வெங்காயத்தை உறிக்கும் போது கண்ணில் நீர் வருவது எதனால்?
வெங்காயத்தை உறிக்கும் போது அதிலிருந்து ஒரு விதமான என்சைம்
வெளிவருகிறது. அவை சல்ஃபனிக் அசிடை உருவாக்கி, வாயுவாக மாறி,
கண்ணின் நீர் திரவத்தை உருவாக்குகிறது. அது எரிச்சலை உண்டாக்குகிறது.
எப்படி எரிச்சல் இல்லாமல் செய்வதுங்கிறிங்களா?
முடியும்.
ஓடற தண்ணீரில் வெங்காயத்தை வைத்துக்கொண்டு உறிச்சிங்கன்னா,
இந்தப் பிரச்சனையை சமாளிக்கலாம். இல்லையா, வெங்காய வேரை கிள்ளாமல் உறிக்கணும். இல்லையா, ரெஃப்ரிஜிரேட்டரில் வெங்காயத்தை சிறிது நேரம் வைத்துவிட்டு பிறகு உறிங்க.
உறிக்கற போது ஃபேனை ஒடவிட்டு, அந்த வாயு கண்ணிலெ படாம
செய்யுங்க, அல்லது கண்ணாடி போட்டுண்டு உறிங்க.

ஆண்களுக்கு ஒரு நல்ல செய்தி!!!
நியூசிலாந்து விஞ்ஞானிகள் நமக்காக ‘கண்ணிலெ நீர் வராத” வெங்காயத்தை உருவாக்கி இருக்காங்களாம்.
ரொம்ப முக்கியமான விஷ்யம் என்னனா, வெங்காய உற்பத்திலெ சீனாவுக்கு
அடுத்து நாம உலகத்திலெ ரெண்டாவது இடத்துலெ இருக்கோம்!!!
அது சரி, வெங்காயத்தை வச்சுட்டு நாம என்ன பண்ணறது?
வெங்காயம் இன்னைக்கு சமையலுக்குப் பயன்படுத்தலேன்னா, பல வீடுகளில் சண்டை வருது தெரியுமா?
வெங்காயத்தை தக்காளியுடன் வதக்கி சட்னி பண்ணலாம். வெங்காயத்தை மெல்லிசா சீவி கடலைமாவுடன் சேர்த்து எண்ணையில் பொறித்து பஜ்ஜி பண்ணலாம்.
எத்தனை ரோடு கடையில் வெங்காய பக்கோடாவுக்கு வரிசை நிக்குது தெரியுமா?
என்ன வேணாலும் பண்ணலாம்!!
ஐயா, வெங்காயம் எங்கள் உயிருடன் கலந்த உறவு அய்யா!!!
அதனால் தான் வெங்காயத்தை அலங்கரித்து பல வடிவங்கள்ள ஒரு சிலர்  பண்ணி இருக்கிறார்கள். இதுக்காக போட்டி எல்லாம் நடக்குதுங்க!
பாருங்களேன், எப்படியெல்லாம் வெங்காயத்தை அலங்காரம் செய்ய முடியும்ன்னு காண்பித்து இருக்கிறார்கள்.



வெங்காய கடிகார்ம்

அணிலாக

சிலந்திகளாக

பெண்கள் பரேட்

செஃப்

ஊர்வனவாக

ராஜா ராணிகள்

எலிகளாக