ஞாயிறு, ஜூலை 28

தர்ப்பணம் செய்யணுமா?

”வாப்பா, கோபாலா.எங்கே இவ்வளவு தூரம்?”
”ராமசாமி, சும்மா பார்த்துட்டு போகாலாம்ன்னு வந்தேன், ஆமா,
என்னப்பா பண்ணிக்கொண்டு இருக்கே?”
“இன்னிக்கு அமாவாசை, அதனால் த்ர்ப்பணம் பண்ணிண்டுருக்கேன்”.
“எதுக்கு த்ர்ப்பணம் பண்ணனும்?’
‘இது என்னப்பா கேள்வி? நம்ம தகப்பனார், தாயார், முன்னோர் ஆகியோருக்கு  அமாவாசை, கிரஹணம், அவர்கள் இறந்த திதி ஆகிய நாட்களில் தர்ப்பணம் பண்ணா போற வழிக்கு புண்ணீயம்ன்னு பெரியவர்கள் சொல்லி இருக்க்றது உனக்குத் தெரியாதா? இதென்ன புதுசா கேட்கிறே?”
”யார் போற வழிக்கு?”
“இதென்ன கேள்வி? அவர்களுக்குத் தான்.”
”அதில்லைப்பா, அவர்கள் தான் போய் சேர்ந்துட்டாங்களே, அப்பறம் அவர்களுக்கு எங்கே புண்ணியம் போய் சேரப் போறது?”
“இதென்ன விதண்டாவாதம் பேசறே?”.
"நான் சொல்லல்லை இதெ.”
“பின்ன யார் சொன்னாங்க?”.
“சென்ற ஞாயிறு அன்று திருவங்கத்தில் உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகளின் உபன்யாசம் ‘வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே’ என்ற தலைப்பில் பேசினார். அப்ப எதுக்குத் தர்ப்பணம், திதி இதெல்லாம் செயறது என்பதைப் பற்றியும், பாபம், புண்ணீயம் என்பதைப்
பற்றியும் பேசினார். அப்பத்தான் பாபத்தையும், புண்ணியத்தையும் தொலத்தாத்தான் வைகுந்தம் போகமுடியும். நாம் பண்ணற தர்ப்பணம், முன்னோருக்கு கொடுக்கிற திதி இவையெல்லாம் அவர்களுக்கு போய் சேராது. நம்ம கர்மத்தை தொலைத்தால் தான் நாம் வைகுந்தம் போக முடியுமாம். நம்ம முன்னோர்கள் அவர்கள் கர்மத்தை  லைத்திருந்தார்கள்
என்றால் அவர்கள் வைகுந்தம் போய் இருப்பார்களாம். நாம எள்ளும் தண்ணியும் இறைத்தால் நமக்குத்தான் புண்ணியம். அவர்களுக்கு அப்படியே போய்ச் சேராதாம்.
”பின்ன எப்படிப் போய் சேருமாம்”.
”அப்பறம் ஒரு உதாரணம் கொடுத்தார் பாரு, சூப்பர்.”
“என்ன?”
“இப்ப நம்ம செல்லுங்கற கைபேசியிலே பேசத்தானே செய்யறோம், மற்ற பக்கத்திலெ இருக்கிறவங்களுக்கு அப்படியே போய்ச் சேருதா?”
“அதெப்படி போய்ச் சேரும்?’. 
”அப்ப என்ன நடக்குது அங்க?”
“ஒலியை மின் அலைகளா மாற்றி அதன் அதிர்வெண்ணையும் அதிகரித்து, வேறொரு அதிர்வெண்ணோடு கலந்து ஏரியல் மூலமா அனுப்புறாங்க. மற்ற பக்கத்திலே இதெ தலைகீழா மாற்றி மீண்டும் ஒலி அலைகளா மாற்றின பிறகு நம் காதிலெ விழுது இல்லையா? (இதுக்குப் பேரு ஆங்கிலத்தில் modulation and demodulation என்று சொல்வார்கள்). அதுபோலத்தான் நாம எள்ளு தண்ணி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்கள் செய்த கர்மவினைப்படி இப்ப அவர்கள் என்ன பிறவி எடுத்து இருக்காங்களோ அதற்கு ஏற்றாற்போல், உதாரணத்துக்கு, அதாவது மாடு ஜன்மம் எனில் புல்லாக, போய் சேருமாம்.”
“பிரமாதமா இருக்கே, ஏன் விதண்டாவாதம் பண்ணறவங்களுக்கு கூட இது சரியாப் படுமே, இல்ல!
“அதோட விடல ஸ்வாமிகள், அந்த மாதிரி இறந்தவங்களுக்கு காரியம் ஸ்ரிங்கத்தில் பண்ணா விஷேஷம், அதுக்காக திருமங்கை ஆழ்வார், பெருமாளிடம் வேண்டி ஒரு படித்துறை கட்டி இருக்கான்னு சொல்லி
அதுக்கான் கதையையும் சொன்னார். 

(அந்தக் கதை ஊர் கூடி தேர் இழுப்போம் அன்ற தலைப்பில் முன்னர் எழுதி உள்ளோம்).”
”அதோடு இல்லாமல் அந்த காரியங்கள் செய்ய தன்னார்வ தொண்டு அமைப்பையும் நிறுவி கட்டடங்கள் கட்டிக் கொண்டு இருக்கா, அதுக்கு எல்லாரும் நிதி உதவி செய்யாணுன்னு வேண்டி கேட்டார்கள். நம்முடைய பொண்ணு பையன் வெளினாட்டுலே இருந்தா அவர்களிடம் இருந்தும் நிதி கேட்டு கொடுங்கன்னு வேண்டி கேட்டார்கள்”
“செய்ய வேண்டியது தான் அப்பா. அந்த விலாசம் சொல்லு, உடனே ஒரு தொகையை கொடுத்து போற காலத்துக்கு புண்ணியத்தைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்வோம்”. 

இது தான் அந்த அட்ரஸ்:
               "ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் ட்ரஸ்ட்"
 2008 ஆண்டு பதிவு செய்யப்பட்டு  முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. கொள்ளிடக்கரையில் 11000 சதுர அடி, 
ஒரு தர்ம சிந்தனை  கொண்ட குடும்பம் மூலமாக தானமாக பெறப்பட்டு, ட்ரஸ்ட் பெயரில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
நித்ய விதிகளுக்கு அறைகள், கிணறு, கரைப்பதற்கு குளம், தீட்டு இல்லாமல் காரியங்கள்  நடத்த தனியான இடம், 
கழிவறைகள், தடையில்லாத மின்சாரம் போன்றவைகளுக்கு  நன்கொடைகள் எதிர்பார்க்கிறார்கள்.
ராமனுக்கு அணில் செய்தது போல், ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். இதில் அளிக்கப்படும் நன்கொடைகள் 
80G பிரிவின் படி வருமான வரி விலக்கு உண்டாம்.
மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
                 ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் டிரஸ்ட்
                 23, ராஜாஜி தெரு, ரெங்கநகர், ஸ்ரீரங்கம்,திருச்சி-620006
                 போன்:0431-2433078,
                E-Mail:stmmtrust@yahoo.com




செவ்வாய், ஜூலை 23

எப்படி இருக்க வேண்டும் உறவுகள்?





ஒரு தகப்பனார் தன்னுடைய வயதான காலத்தில் தன் சொத்துக்களை
தன் இரு பையன்களுக்கும் சமமாக எழுதி வைத்து விட்டு இறந்து 
போனார். ஒருவனுக்குக் கலாயாணமாகி குழந்தைகள் உள்ளனர்.
மற்றவன் பிரம்மச்சாரி.
கல்யாணமான பையன் தன் மனைவியிடம்,
“கமலா,என் தம்பி ராகவன் கலயாணமாகவில்லை. அவனுக்கு என்று
வாரிசுகளும் இல்லை. வியாதி என்று கடைசி காலத்தில் வந்தால் 
அவன் கஷ்டப் படுவான், நமக்கோ குழந்தைகள் உள்ளனர்.
கடைசி காலத்தில் நம் குழந்தைகள் நம்மைக் காப்பாற்றும். எனவே
அப்பா நமக்கு என்று கொடுத்த சொத்தை ராகவனுக்குக் கொடுக்கலாம்
என்று நினைக்கிறேன், நீ என்ன நினைக்கிறாய்?”
”இதில் என்ன அப்பா சந்தேகம்.  இவ்வளவு நாட்கள் சொத்தை வைத்துக்
கொண்டிருந்த்தே தப்பு உடனே சித்தப்பாவுக்கு மாற்றி எழுதி விடுங்கள்”
அம்மா பதில் சொல்ல வருவதற்குள் குழந்தைகள் இருவரும் கோரசாக
அப்பாவுக்கு பதில் சொன்னார்கள்.
“அமாங்க, குழந்தைகள் சொல்வது தான் கரக்ட், போஙக உடனே மச்சினரிடம் கொண்டு போய் கொடுங்க”, மனைவி கமலா தன் கணவரிடம் சொன்னாள்.
”இதோ தம்பியை பார்க்கக் கிளம்பறேன்”.
”என்னங்க, வாசலில் யார் வந்திகிருக்கா பாருங்க?”, சட்டையை போட்டுக்கொண்டு கிளம்ப இருந்த கணவனை பார்த்து மனைவி சொன்னாள்.
“வாங்க சித்தப்பா, உங்களைப் பத்தித்தான் இப்ப பேசிகிட்டு இருந்தோம்,
நீங்களே வந்துட்டிங்க”, குழந்தைகள் வாசலில் சித்தப்பாவை பார்த்து
சந்தோஷத்தில் வரவேற்றனர்.
“என்ன அண்ணா, மன்னி, பசங்களா எல்லோரும் நலம் தானே”, ராகவன்
எல்லோரையும் குசலம் விஜாரித்தான்.
“நலம்தான் ராகவா, நீ எப்படி இருக்காய்? கமலா, தம்பிக்கு சாப்பிட சூடா
ஏதாவது கொண்டா. உன்னைப் பார்க்கத்தான் நானே கிளம்பிக்கொண்டு 
இருந்தேன். அதென்ன கையில் என்ன பை?”
“நலம்தான் அண்ணா, ஒண்ணும் இல்ல, குழந்தைகள், மன்னி, மற்றும்
உன்னைப் பாக்கணும் போல இருந்தது, அதான் கிளம்பி வந்துட்டேன்”
“காபியை சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க, தம்பி”, மச்சினரிடம் காபியை
கொடுத்துக் கொண்டே கமலா கூறினாள்.
”காபி நன்னாக இருக்கு மன்னி”.
“அது சரி என்ன விஷயம், உடம்பு ஏதும் சரியில்லையா ராகவா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டு
அதெ உடனே செயல்படுத்துடலாம்ன்னு தான் வந்தேன். நீங்க தப்பா
நினைக்க கூடாது”.
“அப்படி என்னடா தலை போற விஷயம், உடனே சொல்லாட்டா என்ன,
போன்ல சொல்லி இருக்கலாமே?”
“அதானே தம்பி, மெதுவா சொல்லிருக்கலாமே”.
“இல்ல மன்னி, அண்ணா. நல்ல காரியங்களை தள்ளிப் போடக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. அப்படித் தள்ளிப் போட்டா சமயங்களில் மனசு மாறி செய்யாம போயிடலாம். அதான் உடனே கிளம்பி வந்துட்டேன் அண்ணா”.
“என்ன சித்தப்பா பீடிகை எல்லாம் பலமா இருக்கு?”
”அப்படி இல்ல குழந்தைகளா, இப்ப எனக்கு யார் இருக்கா உஙகளை விட்டா? கடைசி காலத்திலே உங்க காலடியிலே வந்து விழுந்திட மாட்டேனா? நீங்க, அண்ணி, அண்ணா எல்லாரும் என்ன கரை சேர்த்துட மாட்டீங்களா?”
ஷாக்காகி, “திடீரென்னு அதுக்கு என்ன வந்ததுங்க?” மன்னி.
“அப்படி இல்லை மன்னி, நெருப்புன்னா வாய் வெந்துடுமா, எதுக்கும்
முன்னெச்சரிக்கையாக இருக்கணும் இல்லையா? அதோட அண்ணாவுக்கும் பெரிய குடும்பம், ரெண்டு குழந்தைகள், இவர்களுக்கு கல்யாணம் பண்ண வேண்டும், அதுக்கெல்லாம் செலவு அதிகமாகும்”.
“அதனால,”
“அதனால யோசிச்சேன், நானோ சம்பாதிக்கிறேன் அது எனக்குப் 
போறும். அப்பா கொடுத்த சொத்த வச்சுண்டு நான் என்ன
பண்ணப்போறேன், அத ரெண்டு கொழந்தைகள் பேருலெ மாத்தி
எடுத்துண்டு வந்திருக்கேன், மறுப்பு சொல்லாம வாங்கிக்கணும்”.
இப்படி சொல்லிக் கொண்டே பையைத் திறந்து டாகுமெண்டுகளை
குழந்தைகளை கூப்பிட்டு கொடுத்தான் ராகவன்.
குழந்தைகள்,அண்ணா, மன்னி, தம்பியை நினத்து வாயடைத்து நின்றார்கள்.
உறவுகள் இப்படி அல்லவா இருக்கவேண்டும்!!!!!!
எங்கேயோ கேட்டது தான்!!!!!