திங்கள், ஜூலை 23

கிளிப் பேச்சுக் கேட்க, வா?


கிளிப் பேச்சுக் கேட்க, வா?
என்னங்க இது தலைப்பு, கிளிப் பேச்சுக் கேட்கவான்னு. நீங்க சொல்றது கேட்குது, என்ன கிளி  ஏதாவது சொல்லுமா, அத நம்ம கேட்கிறதான்னு. அந்த மாதிரி கிளி பேச்சக் கேட்டது எவ்வளவு  பலைனைக் கொடுத்து இருக்குன்னு இந்த கதை முடிவிலே நீங்களே ஒத்துப்பிங்க பாருங்க! 
அது சரி விஷயத்துக்கு வாங்கிறிங்க.
கிளிக்கு அந்தக் காலத்தில் இருந்து முக்கியத்துவம் நிறையக கொடுத்து இருக்காங்க.
இராமானுஜர் கிளி வளர்த்தாராம், அதற்குக் குலசேகரன் என்று பெயர் வைத்தாராம்.
  "இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
    தென்னரங்கம் பாடவல்ல சீர் பெருமாள்
      பொன்னன் சிலை முதலியர்வேள் எங்கள் குலசேகரன் என்றே கூறு"
 அத போல "எல்லே இலங்கிளியே இன்னும் உறங்குதியோ" என்று ஆண்டாளும்
 "சொல்லெடுத்து தங்கிளியே சொல்லே" என்று திருமங்கையாழ்வாரும் கிளியை பற்றி  நிறையப் பேர் பாடியுள்ளார்கள் .
அதென்ன குயில் தானே நன்னாப் பாடும் என்பார்கள், நீ கிளி நன்னாப் பாடுன்னு சொல்றே?
அப்படின்னு சொல்றது கேட்குது
குயில் பாடித்துன்னா இன்று பூரா கேட்டுண்டே இருக்கலாம், ஆனா கிளி பாடினா அப்படி  இல்லை, அதன் குரல் கரகரன்னு, ஏதோ தகரத்திலே கீர்ராப்போலே இருக்கும் இல்லையா? ஆனா கிளி பேசறது நன்னா இருக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு. நாமா என்ன  சொல்லறமோ அத திருப்பிச் சொல்லும்.
அப்படித்தான் கிளி சொன்னது ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி இருக்குன்னாப் பாருங்க.
அதென்ன திருப்பு முனை?
  "காவேரி விரஜா சேயம் வைகுந்தம் ரங்க மந்திரம்
   ஸ வாஸுதேவோ ரங்கேசய  பிரத்யட்சம் பரமம் பதம்"
இப்படின்னு சொன்னதையே திருப்பித்திருப்பிச் சொல்லிண்டு இருந்தது கிளி.
எங்கே தெரியுமா?
தர்ம வர்மா பரம்பரையில் வந்த கிள்ளிச் (கிளிச்) சோழன் வேட்டைக்கு வந்த

 கிளிச்சோழன்  கிளி சொல்வதை
கேட்டல்
போது  ஒரு மரத்தடியில் படுத்து இருந்த போது, மரத்தில் இருந்த கிளி மேலே சொன்ன  ஸ்லோகத்தை அவன் கேட்கும்படி சொன்னது.
சோழனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியலை.
என்னவோ கிளி சொல்லுதே கேட்போம்ன்னு யோசித்தான்.
"இதோ இங்கே இருக்கே காவிரி அதுதான் வைகுந்தத்தில் உள்ள விரஜை நதி.
விமாநம் தான் ரங்க மந்திரம், வாசுதேவன் தான் ரங்கநாதனாக இருக்கான்
இது தான் பூலோகத்திலே உள்ள வைகுந்தம்"
இப்படிங்கற மாதிரி அவனுக்குப் புரிந்தது
உடனே அடுத்த பகுதிய கிளி சொல்லித்து,
  "விமாநம் பிரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம்
     ஸ்ரீ ரங்க சாயி பகவான் ப்ரண வார்த்த ப்ரகாசக:
"ஓம் என்ற ப்ரணவாகாரத்துக்கு உரியது தான் விமாநம், நான்கு வேதம் தான் மேலே உள்ள  கலசங்கள் உள்ளே ஸ்ரீ ரங்கநாதன், இவற்றை உணர்த்துவதற்காக சயனித்துக் கொண்டு இருக்கிறான்."
கிளிச் சோழனுக்கு ஒண்ணும் புரியலே, எதுக்காக கிளி இதே சொல்லணும், அப்படின்னு  தூங்கிப் போனான். அன்னிக்கு ராத்திரி அவன கனவுலே

கனவில் அரங்கன் தன்னை உணர்த்தும் காட்சி
பெருமான் தான் யார் என்பதை  உணர்த்தினான்.
மறுநாள் முதல் மண் மேடிட்டு இருந்த பகுதிகளை நீக்கினான், விமானம் கொஞ்சம்  கொஞ்சமாக வெளியே தெரிந்தது.
ஆக பெருமான் கிளி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்னாப் பாருங்க?
இப்பச் சொல்லுங்க "கிளிப் பேச்சுக் கேட்க, வா" அப்படிங்கற தலைப்பு சரிதானே?
அதுக்காகத்தான் ஸ்ரீரங்கத்திலே கிளி மண்டபம்ன்னு அந்த இடத்துக்குப் பெயர்.   உடனே கிளம்புங்க .

பாற்கடலில் இருந்து ரங்கவிமானம் 
  
அரங்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக