புதன், டிசம்பர் 26

வெங்காயத்தை வச்சு என்ன பண்றது?

சூப்பும் கண்மனிகளாக வெங்காயம்

கண்ணில் நீர் வரவழைக்கும் பொருள்.
கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வைக்கும் மணமகளிடம்,
“என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன், என் பையன் கண்ணில்
நீ வராமல் பார்த்துக் கொள்வது உன் கையில் தான் இருக்கு”,
பையனின் தாயர்ர் சொல்கிறார்.
“கவலைப் படாதீங்க, அவர் வெங்காயம் உறிக்கும் போது மட்டும் கண்ணில் நீர் வருவதை என்னால் தடுக்க என்னால் முடியாது, அம்மா” என்கிறாள் மணமகள்.
இது எல்லா வீடுகளிளும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சி.
ஆமாம், வெங்காயத்தை உறிக்கும் போது கண்ணில் நீர் வருவது எதனால்?
வெங்காயத்தை உறிக்கும் போது அதிலிருந்து ஒரு விதமான என்சைம்
வெளிவருகிறது. அவை சல்ஃபனிக் அசிடை உருவாக்கி, வாயுவாக மாறி,
கண்ணின் நீர் திரவத்தை உருவாக்குகிறது. அது எரிச்சலை உண்டாக்குகிறது.
எப்படி எரிச்சல் இல்லாமல் செய்வதுங்கிறிங்களா?
முடியும்.
ஓடற தண்ணீரில் வெங்காயத்தை வைத்துக்கொண்டு உறிச்சிங்கன்னா,
இந்தப் பிரச்சனையை சமாளிக்கலாம். இல்லையா, வெங்காய வேரை கிள்ளாமல் உறிக்கணும். இல்லையா, ரெஃப்ரிஜிரேட்டரில் வெங்காயத்தை சிறிது நேரம் வைத்துவிட்டு பிறகு உறிங்க.
உறிக்கற போது ஃபேனை ஒடவிட்டு, அந்த வாயு கண்ணிலெ படாம
செய்யுங்க, அல்லது கண்ணாடி போட்டுண்டு உறிங்க.

ஆண்களுக்கு ஒரு நல்ல செய்தி!!!
நியூசிலாந்து விஞ்ஞானிகள் நமக்காக ‘கண்ணிலெ நீர் வராத” வெங்காயத்தை உருவாக்கி இருக்காங்களாம்.
ரொம்ப முக்கியமான விஷ்யம் என்னனா, வெங்காய உற்பத்திலெ சீனாவுக்கு
அடுத்து நாம உலகத்திலெ ரெண்டாவது இடத்துலெ இருக்கோம்!!!
அது சரி, வெங்காயத்தை வச்சுட்டு நாம என்ன பண்ணறது?
வெங்காயம் இன்னைக்கு சமையலுக்குப் பயன்படுத்தலேன்னா, பல வீடுகளில் சண்டை வருது தெரியுமா?
வெங்காயத்தை தக்காளியுடன் வதக்கி சட்னி பண்ணலாம். வெங்காயத்தை மெல்லிசா சீவி கடலைமாவுடன் சேர்த்து எண்ணையில் பொறித்து பஜ்ஜி பண்ணலாம்.
எத்தனை ரோடு கடையில் வெங்காய பக்கோடாவுக்கு வரிசை நிக்குது தெரியுமா?
என்ன வேணாலும் பண்ணலாம்!!
ஐயா, வெங்காயம் எங்கள் உயிருடன் கலந்த உறவு அய்யா!!!
அதனால் தான் வெங்காயத்தை அலங்கரித்து பல வடிவங்கள்ள ஒரு சிலர்  பண்ணி இருக்கிறார்கள். இதுக்காக போட்டி எல்லாம் நடக்குதுங்க!
பாருங்களேன், எப்படியெல்லாம் வெங்காயத்தை அலங்காரம் செய்ய முடியும்ன்னு காண்பித்து இருக்கிறார்கள்.



வெங்காய கடிகார்ம்

அணிலாக

சிலந்திகளாக

பெண்கள் பரேட்

செஃப்

ஊர்வனவாக

ராஜா ராணிகள்

எலிகளாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக