ஞாயிறு, டிசம்பர் 22

ஷாக் டிரிட்மெண்ட்



ஷாக் டிரிட்மெண்ட்
"ஹலோ,ராமநாதனா?"
"ஆமாம், நான்தான் ராமநாதன் தான் பேசறேன்."
"நீங்க யாரு பேசறது, தெரியலயே?"
"நான் கிருஷ்ணஸ்வாமி, மாம்பலத்தில் இருந்து பேசறேன்."
சொல்லுங்க சார்.
"போன மாசம் நீங்க உங்க பையன் ஜாதகத்தை என் பெண்ணுக்கு
பொருத்தமா இருக்குன்னு அனுப்பினுங்க இல்லை, அந்தப் பெண்ணின் அப்பா தான் பேசறேன்."
"ஆமா சார்,  ஞாபகம் வருது, நீங்க தான், நான் நல்லா பொருத்தமா இருக்குன்னு சொல்லியும், 
நீங்க பொருத்தம் இல்லைன்னு சொல்லிட்டீங்களே."
"ஆமாம் சார்,வெரி சாரி சார், அன்னைக்கு நான் பாத்த ஜோசியர அப்படி சொன்னதால 
நான் உங்ககிட்ட அப்படி சொல்லிட்டேன், அப்பறமா எங்க ஆஸ்தான ஜோசியர் உங்க பையனின் ஜாதகம்  என் பொண்ணோட ஜாதகத்தோட நல்லாப் பொருந்தி இருக்குன்னும், இந்தப் பொருத்தத்தை விட்டுடாதீங்கன்னும் 
சொன்னார்,அதனால தான்.........."
போன்ல இழுத்தார். 
அந்த சமயம் பார்த்து,
"என்னங்க போன்ல யாருங்க?”
என் மனைவி.
"சார், என் சகபத்னி ஏதோ சொல்லணுங்கிறாங்க, நானே கூப்பிடுறேன.”
சொல்லி ரிஸீவரைக்கீழே வைத்தேன்.
மீண்டும் போன் சிணுங்கியது.
"ராமநாதன், நான் திருவல்லிக்கேணி கோபாலன் பேசறேன், என் பெண் கவுஸல்யா கல்யாண விஷயமா  உஙகளை நேரில் பாக்க வரணும், எப்ப உங்களுக்கு வசதிப்படும்.”
எனக்கு தூக்கிவாரிப போட்டது!
இந்த  கோபாலன் பெண்ணை என் பையனுக்கு பொருத்தமா இருக்கான்னு  
கேட்டு எத்தனை முறை அவர் வீட்டுக்கு படை எடுத்திருப்பேன்.
இன்னும் ஜாதகம் பாக்கலை, ஜோசியர் ஊரில இல்லை, பெண்ணோட பெரியம்மாகிட்ட கேட்கணும், 
இப்படி என்னன்ன சாக்கெல்லாம் சொன்னார, இப்ப என்ன திடீரென்னு!! ஓண்ணும் புரியலயே!!
"அதுக்கென்ன சார், எப்ப வேணாலும் பாக்கலாம் சார், வறதுக்கு முன்னால போன் பண்ணுங்க,”
என்று சொல்லி போனை வைத்தேன்.
அடுத்த அரைமணி நேரத்துக்குள், நான்கு பேர், இதே மாதிரி, சொல்லி வைத்தார்போல் போன் செய்தார்கள்.
என் பையனுக்காக நான் நாயா அலைந்தத நினைத்துப் பாரத்தேன்
என் மனைவியிடம், "என்ன நம்ம பையனுக்கு இதுவரை நூறு ஜாதகமாவது வாங்கி இருக்கமாட்டோம்”,
என்று மனைவியிடம் என் ஆதங்கத்தைச் சொன்னேன்.
அந்தக் காலத்தில பெண்ணப் பெத்தவன் மாப்பிள்ளைக்காக அலைந்ததாக என்தகப்பனார் சொல்லிக் கேட்டு இருக்கிறேன், 
இப்ப நான் பிள்ளைக்காக அலையவேண்டு இருக்கு. எல்லாம் காலம் தான் செய்யுது.
அன்னிக்கு இப்படித்தான் ஓரு பெண்ணின் அம்மாகிட்ட, எல்லா விவரத்தையும் சொல்லி, என்பையன் ஜாதகம் அனுப்பி 
ஓரு வாரம் ஆகிறது, உங்க பெண்ணோட ஜாதத்தை நீங்க இன்னும் அனுப்பலை, அனுப்பினா நன்னா இருக்கும், 
அப்படீன்னு சொன்னா, 
நாங்க இப்ப எங்க பெண்ணுக்கு கல்யாணம் பண்றதால்லை, அப்படின்னு கூலா பதில் சொல்றாங்கன்னாப் பாருங்க சார்!!
இதுவாவது பரவாயில்லை சார்.
இன்னொருத்தர், என் பெண் நாப்பதாயிரம் சம்பாதிக்கிறா, உங்க பையன் அதவிட கூட வாங்குவானா. இதுக்கு சம்மதம்ன்னா, ஜாதகம் அனுப்புங்க, அப்படிங்கறாங்க சார். இதுல வேடிக்கை என்னன்னா அவரோட 
பெண் பிளஸ் கூட படிக்கல்ல.
இப்பத் தான் கிளைமாக்ஸ்!!!
இன்னொருத்தர் கூசாம,
பையனைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தபிறகு மாப்பிள்ளை அவங்க வீட்டோட வந்துடுவாரான்னு கூலாக, 
என்னிடம் கேட்கிறார் சார்.
எப்படி இருக்கு பாருங்க கல்யாண  மார்க்கெட்!!
இப்படி என்னுடைய  பையன் ஜாதக அனுபவம் இருக்கும் போதுதான் மேலே சொன்னபோன் கால்கள்.
இத்தனை போன் அழைப்புகளையும் கேட்ட பிறகு நானும் என் மனைவியும் மயக்கம் போடாத குறை.
இத்தோடு அது நிக்கல.
அப்புறம் நடந்தது தான் முக்கியம்.

கவுஸல்யா பேசறேன் சார்!

இது என்ன புதுக் குழப்பம்?

”நான் திருவல்லிகேணி மிஸ்டர் கோபாலன் அவர்களின் பெண்.  எஙக வீட்டுக்கு நீங்க அடிக்கடி வரதைப் பார்த்துள்ளேன்.
என் அப்பா உங்களிடம் பொறுமையாகப் பேசாமல் உங்களை அடிக்கடி அலைக்கழித்து இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். அதற்காக உஙகளிடம்  மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் போனபிறகு என் தாயாருக்கும் தந்தைக்கும் இடையே நடந்த விவாதம் தான் இப்போது  என்னை உங்களிடம் பேசத் தூண்டியது.”
”அப்படிஎன்னம்மா அங்கு நடந்தது?” இது நான்.
”அதைச் சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது சார், இருந்தாலும்
சொல்லாமல் இருக்கமுடியவில்லை சார்.”
ஓரு பிளாஷ் பேக!!!

”என்னங்க,உங்க பெண்ணுக்கு இத்தனை ஜாதகம் வந்து இருக்கே,
எந்த பையனைப் பாக்கப்போறீங்க?  அவ நல்ல வேலையில் நல்ல சம்பளத்தோட இருப்பதால், நல்ல பையனாப் பாருங்க,என்ன நான் சொல்லறது சரிதானே?” இது என் அம்மா.
”ஏண்டி, ஓண்ணும் புரியாத மாதிரி இருக்கே?” அப்பா.
”என்னங்க சொல்றீங்க? எனக்கு ஓண்ணும் புரியலயே?”
”எண்டி, நமக்கு இருக்கிறது ஓரே பெண். அவ சம்பளத்தை நம்பித்தான் நம்ம குடும்பம் இருக்குல்லியா? அவ கல்யாணம் ஆகி போயிட்டா நாம சாப்பாட்டுக்கு என்னபண்றது?”
”அதுக்காக, நம்ம பெண்ணுக்கு கல்யாணம் பண்ணப் போறதில்லையா?”
”ஏன் பண்ணப் போறதில்லை? வீட்டோட மாப்பிளையா, அவ சம்பளத்தில கைவைக்காத பையன் கிடைக்கற போது கல்யாணம் பண்ணாப் போச்சு, அது வரைக்கும் உன் திருவாயை மூடிக் கொண்டிருக்கையா?”


”இதைக் கேட்டவுடன் எனக்கு ஷாக்காகிப் போச்சு. இவ்வளவு மோசமானவங்களா என் பெற்றோர்கள்!
எனக்கு ஓரு நிமிஷம் என்ன பண்ணறதுன்னு  தெரியல. எதாவது பண்ணனும். என் கல்யாணத்தை வியாபாரம் ஆக்கிவிட்டார்களே!!”
”இவங்க பேசினதை நான் கேட்காதது மாதிரி அன்று இரவு முழுதும் தூக்கமில்லாமல் கழித்தேன்.
அப்பத் தான், எனக்கு ஓரு ஐடியா தோணித்து. எங்க வீட்டுக்கு வரும், எங்க ஆபீஸ்ல வேலை செய்யும் நண்பர், என்னைவிட வயதில் முத்தவர், ராமகிருஷ்ணன் ஞாபகம் வந்தது. அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. அவரை நான் ஆபீஸில என் உடன் பிறந்தவனைப் போலத்தான் பழகுவேன். ஆனால் இது என பெற்றோர்களுக்குத் தெரியாது.
எனவே இவரை வைத்து ஏதாவது செய்யணும்னு தோணித்து.
காலையில எழுந்தவுடன் முதல் காரியமா ராமகிருஷ்ணனுக்கு போன் பண்ணேன்.”

”என்ன பண்ணீங்க நீங்க? இது நான்.

”இதுக்கு முன்னால, நீங்க எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனபோது உங்க பையை இங்கு வச்சிட்டு போயிட்டீங்க போல. அதத் திறந்து பார்த்தேன். அதுல உங்க போன், அட்ரஸ் மற்றும் நீங்க பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களின் அட்ரஸும் கிடைத்தது. அவங்களுக்கு போன் பண்ணி எங்க வீட்டில நடந்த விஷயத்தைச் சொல்லி, நான் பண்ணப போற  விஷயத்தையும் சொன்னேன்.
அவங்க ளுக்கெல்லாம் ஓரே ஷாக். நான் பண்ணப்போற விஷயத்துக்கு முழு ஓத்துழைப்பு தரதாச் சொன்னாங்க.

சரி, விஷயத்துக்கு வரேன்.”

”ஆமாம்,ஏதோ போன் பண்ணப்போறேன்னு சொன்னீங்களே?” இது நான்

”ஆமாம், நான் போன் பண்ணறது என் பெற்றோர்களுக்குத் தெரியும்படி பார்த்துக் கொண்டேன்.”

                         ”ராமகிருஷ்ணன், டியர், என்ன மறந்துட்டீங்களா?”
இப்படி ஆரம்பித்தேன். ஓவ்வொரு வார்த்தையிலும் எதிராக இருப்பவர் கிட்ட அதிகமான அன்பைப்  பொழிவது மாதிரி பேசினேன். நடுவில என் பெற்றோர்கள் முகம் என்ன மாதிரி இருக்குன்னு பார்த்துக் கொண்டேன்.
அதாவது நாம கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம், அதுக்கு நம்ம பெற்றோரகளை கூப்பிடலாமா அல்லது  வேண்டாமா என்பது போன்ற வசனங்களைப் பயன்படுத்தினேன்.”
”உண்மையிலே என் பெற்றோர்கள் கொஞ்சம் அப்செட் ஆன மாதிரி தான் எனக்குத் தெரிந்தது.
ஷாக் டிரிட்மெண்ட் கொடுத்து இருக்கேன், என்ன நடக்குதுன்னு
பார்ப்போம் சார், உஙகளை ரொம்ப நேரம்  போர் அடிக்க வைத்துட்டேன்னு நினைக்கிறேன்.
சாரி சார், உஙக பையனுக்கு கூடிய சீக்கிரம் மணமாக என்னுடைய வாழ்த்துக்கள்.”

”கொஞ்சம் இரும்மா கவுஸல்யா, நீங்க கொடுத்த ஷாக் டிரீட்மெண்ட் வேலை செய்ய ஆரம்பிடுத்துன்னு நினைக்கிறேன்.”

”என்ன சார சொல்றீங்க?”

”நீங்க இந்த விஷயங்களைப் பத்தியெல்லாம் பேசறதற்கு முன்னால தான் உங்க தகப்பனார் என்னைப் பார்க்கணும்னு சொன்னார்,அது ஓருவேளை நீங்க எடுத்துண்ட முயற்சியாகக் கூட இருக்கும்னு நினைக்கிறேன்.
உங்க முயறசிக்கு நனறி.”



கோல மாவில் என் மணிவியின் கைவண்ணம்.

ஆக நல்லவங்களும் ஊரில் இருக்காங்க போல.
பெண் பாக்க் கிளம்பிட்டேங்க!!!
கீழே பாருங்க, பெண்ணை அழைத்து வரும் காட்சியை!!!!!!!!!!!!!

புதன், டிசம்பர் 4

பாசுரம் சொல்லும் கதை---பகுதி 5 கோவர்த்தன மலையைத் தூக்கின கதை!!!


பாசுரம் சொல்லும் கதை---பகுதி 5
கோவர்த்தன மலையைத் தூக்கின கதை.
"தாத்தா, புதுசா ௭ன்ன ௧தை சொல்லப் போறே?"
"௧ண்ணா, ௧ண்ணன் ஓர் மலையைத் தூக்கின ௧தை பற்றி தான் இன்னைக்கு உனக்குச் சொல்லப் போறேன்."
"என்ன மலையைக் கண்ணன் தூக்கினாரா?"
"ஆமாம் கண்ணா, கண்ணன் மலையைத் தூக்கினார்."
"௭துக்கு தாத்தா?"
கண்ணன் பிறப்பதுக்கு முன்னால் அந்த ஊர் மக்கள் வருஷாவருஷம் இந்திரனுக்கு விழா எடுத்து படையல் செய்வார்கள். எப்போதும் போல அந்த வருஷமும் விழாஎடுக்கலாம்ன்னு   ஊர் மக்கள் தீர்மானம் பண்ணறபோது, கிருஷணன் ,
ஏன் வருஷாவருஷம் இந்தினுக்கே படையல் பண்ணிரீங்க ஓரு மாறுதலுக்கு கோவர்த்தனமலைக்கு படையல்  செய்யலாமே, அந்த மலைதானே உங்களுக்குத் தேவையான பயிர்க ளை வளர்க்க உதவுது,"
என்று சொல்லி மக்களை மனம் திருந்தி கோவர்த்தனமலைக்கு படையல் செய்ய சம்மதம் வாங்கினான்.
"அப்புறம்என்னதாத்தா நடக்கிறது?"
மக்கள் சரின்னு கோவர்த்தனமலைக்கு படையல் செய்யராங்க.
"இந்திரனுக்குகோபம் வரலயா தாத்தா?"
"கோபம் வராம இருக்குமா?"
"அபபறம் என்ன ஆச்சு தாத்தா?"
இந்திரன் பாத்தான், என்னடா வருஷாவருஷம நமக்கு படையல் பண்ணுவாங்களே அது போல இந்த வருஷம் படையல் பண்ணலையேன்னு. நம்மளை ஏன் படையலுக்கு கூப்பிடலைன்னு 
பூமிக்குப் போய் பாக்கலாம்ன்னு பூமிக்கு வரார் இந்திரன்.
"அப்பறம் என்ன ஆறது தாத்தா?"
"மக்கள் கோவர்த்தனமலைக்கு படையல் பண்ணறதைப பாக்கிறார் இந்திரன்."
பயங்கறகோபம் வரது இந்திரனுக்கு!"
பாரு உங்களைஎல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணிறேன்னுன்னு!
"என்ன தாத்தா பண்றார்?"
மழை அரக்கனைக்  கூப்பிட்டு உடனே பயங்கர மழை பெய்ய உத்தரவு போடறார் இந்திரன்.
"மழை அரக்கன் என்ன பண்றார் தாத்தா?"
"இந்திரன் சொன்னா மீறமுடியுமா என்ன?"
மழை பெய்யத் தொடங்கியது. மழைன்னா அப்படிப் பட்ட மழை. ஊரே வெள்ளக்காடா மாறுகிறது. ஒதுங்கறதுக்குஒருஇடம் கூட இல்லை. மக்கள் என்ன பண்றதுன்னு தெரியல.ஓடி கிருஷ்ணன் கிட்ட வராங்க.
கிருஷ்ணா எங்களைக் காப்பாத்து, ஊரே வெள்ளக் காடா இருக்கு, எங்களால எங்க போரதுன்னு தெரியல, 
"நீ சொன்னதாலத் தானே கோவர்த்தன மலைக்கு படையல் செய்தோம், இப்ப நீ தான எங்களைக் காப்பாத்த வேணும்"
அப்படீன்னு மக்கள் கிருஷ்ணன் கிட்ட வந்து கதறாங்க."
கிருஷ்ணன் மக்களைப் பார்த்து, கவலைப் படாதீங்க, உங்களைக் காப்பாத்துவது என்னுடைய கடமைன்னு சொல்றார்.
"அப்பறம் என்ன பண்றார தாத்தா?"
உடனே தன்னோட சுண்டு விரலால கோவர்த்தன மலையை அப்படியே தன் தலைக்கு மேல தூக்கி மக்கள்,ஆடு, மாடு போன்ற எல்லா உயிரினங்களையும் மலைக்குக் கீழே வரச் சொல்றார்.
"மலையைத் தூக்க முடியுமா தாத்தா?"
"நமக்குத் தான் சின்னப் பொருளக்கூட தூக்க முடியாது,ஆனா கண்ணன் பெருமாள் இல்லையா,அவருக்கு மலை கூட கடுகு மாதிரி சிறுத்துப் போயிடும் கண்ணா!"
"அப்புறம் என்ன ஆறது தாத்தா?"
"இந்திரன் வேறு வழில்லாம தோத்துப் போயிடறான்.
சின்னக் குழந்தையா இருக்கிறகிருஷணன் பெருமாள்ன்னு புரிஞ்க்கிறான். அவர்கிட்ட தான்பண்ண தப்புக்கு  மன்னிப்புக் கேட்கிறான்."
"மழையும் நின்னு போயிடறது. இடையர்கள் கண்ணன் யாருனனு புரிஞ்சுக்கிறாங்க."
"இந்த கோவர்த்தன மலையைத் தூக்கினதைப் பற்றி பல ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரப்பந்தத்தில்  பல இடங்களில் பாடியுள்ளார்கள் கண்ணா,அதுல ஓரு பாசுரத்துக்குத் தான் இந்த அர்த்தம் வர மாதிரி 
உள்ளதை கீழே கொடுத்துள்ளேன்."

                                 இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த
                                         எழில்விழ வில்பழ நடைசெய்,
                                 மந்திர விதியில் பூசனை பெறாது
                                         மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்
                                 எந்தமோ டினவா நிரைதள ராமல்
                                         எம்பெரு மானரு ளென்ன,
                                 அந்தமில் வரையால் மழைதடுத் தானைத்
                                         திருவல்லிக் கேணிக்கண் டேனே.

என்று திருவல்லிக்கேணிப் பெருமானைப் பற்றி பாடும் போது திருமங்கையாழ்வார் பாசுரம் விளக்கம் தான் மேலே உள்ள கதை.
"நல்லா இருந்தது தாத்தா."
"இதை ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கு என படமாக எடுத்துள்ளார்கள கண்ணா, பாத்தா அசந்துடுவே."
"அப்படியா, எங்க இருக்கு தாத்தா?"
கீழே கொடுத்துள்ள லின்கை சொடுக்கினா நேரே அங்கேயே கொண்டு போய் விடும், பாரு அசந்துடுவே.
http://www.youtube.com/watch?v=6-UKAJ6dO-U&list=SPB973DBD69DB69061 
ஆங்கிலத்தில் யூ டுயுபில் பாருங்கள்
கோவர்த்தன மலையைத் தூக்குதல்

கண்ணன் மலையை தூக்குதல

பாசுரம் சொல்லும் கதை---பகுதி 6. காளிங்க நர்த்தனம்.



பாசுரம் சொல்லும் கதை---பகுதி 6. காளிங்க நர்த்தனம்.

"என்ன தாத்தா ஓரே பாட்டா இருக்கு?”
"ஆமா கண்ணா, நான் பாடறது பாட்டு இல்லப்பா, பாசுரம்.”
"என்ன பாசுரம் அது தாத்தா?”
            நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
              அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டருள்செய்த
            அஞ்சன வண்ணனைப் பாடிப்பற்
              அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற
"கண்ணன் சின்னக் குழந்தையா இருக்கும் போது பல ஆச்சர்யங்களை நிகழ்த்தி இருக்கார். அதப் பற்றி நான் உனக்கு நிறையச் சொல்றேன். ஆனா இப்ப நான் பாடிய பாசுரம் கண்ணன் ஓரு பாம்பின் மேல டான்ஸ் காளிங்க நர்த்தனம், ஆடியது பற்றியது.”
"என்னது பாம்பு மேல டான்ஸா?”
"ஆமாம், பாம்பு மேல தான் டான்ஸ் தான்!”
"எதுக்கு தாத்தா பாம்பு மேல டான்ஸ் ஆடணும்.”
"அது ஒரு கதை கண்ணா!!!
கிருஷ்ணன் எப்போதும்  தன் நண்பர்களுடன் மாடுகளை மேச்சலுக்குக்காக யமுனை நதிக்கரைக்கு கொண்டு செல்வது வழக்கம். அந்த நதிக்குப் பக்கத்திலே ஒரு மடு இருக்கும்.”
"மடுன்னா என்ன தாத்தா?”
"மடுன்னா குளம் கண்ணா, அதாவது ரொம்ப தண்ணி இருக்காது, கலங்கி இருக்கும், தண்ணி தெளிவா இருக்காது, அதை தான் மடுன்னு சொல்லுவோம்.”
"சரி தாத்தா.”
"இதுக்கு முன்னாலே அந்த மடுவிலெ நிறைய மாடுகள், கன்னுக்குட்டிகள் செத்துப் போயிருக்கு. என்ன காரணம்ன்னு யாருக்கும் தெரியாது. அன்னிக்கு கண்ணன் தன் நண்பர்களோடு அந்த மடுப் பக்கம் தங்கள்
மாடுகளை ஓட்டின்ண்டு வராங்க.”
"ஐயய்யோ, கண்ணனுக்கு இந்த விஷயம் தெரியாதா, தாத்தா?”
"தெரியும் கண்ணா, அது மட்டும் இல்லை, அந்த மடுவில ஒரு பயங்கற விஷ்ம் கொண்ட நாகப்பாம்பு இருக்கும்ன்னும் தெரியும்.
அந்தப் பாம்பு தான் மாடுகள், கன்னுக்குட்டிகள் செத்துப் போகக் காரணம்ன்னும் தெரியும்.”
"தெரிஞ்சுண்டே எதுக்குத் தாத்தா அந்த மடுவுக்கு போகணும்.”
"அந்த பாம்புக்கு “காளியன்”   அப்படின்னு பேர், அவனுக்கு அஞ்சு தலை.”
"அப்பறம் என்ன ஆறது தாத்தா?”
"தன் நண்பர்களை அழைத்து மாடுகளை அந்த மடுவில் தண்ணீர் அருந்தச் அழைத்துச் செல்லும்படி சொல்றான்.
மடுவில் இருந்த காளியனுக்கு குஷி. இன்னிக்கு நமக்கு நல்ல விருந்துன்னு சொல்லிக்கிட்டே வெளியே வரான்."
"அப்புறம் என்ன நடக்குது தாத்தா?”
"நண்பர்கள் மாடுகளை அந்த மடுக்கு அருகாமையில் அழைத்துச் செல்கிறார்கள்.
திடீரென்று ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தா கண்ணனைக் காணோம். நன்ண்பர்களுக்கு பயம்.”
"கண்ணன் எங்க போயிட்டார் தாத்தா?”
”தண்ணிக்குள்ள குதித்தார், நீஞ்சினார், எங்க அந்தக் காளியன்ன்னு தேடினார்.
கண்ணனைக் காணோம்ன்னு நண்பர்கள் உடனே கோகுலத்துக்கு ஒடிப்போய் நந்தகோபனிடம், கண்னன் விஷப்பாம்பு
இருக்கக்கூடிய மடுவுக்குள் குதித்ததை சொல்லப் போறாங்க.
கோகுலத்தில் உள்ள எல்லாரும் பயந்து போய் உடனே ஓடி வராங்க.”
”கண்ணனுக்கு என்ன ஆறது தாத்தா, எனக்கு பயமா இருக்கு.”
”காளியனுக்கு குஷி. மாடுகள் தான் வரும்ன்னு நினைச்சான், மனுஷனே வந்து இருக்கான்னு ரொம்ப மகிழ்ச்சி. தன்னுடைய வாயை ‘ஆ” என்று திறந்து கொண்டு கிருஷ்ணனை முழுங்க ஒடி வரான்.
காளியனுக்குப் பலதடவை போக்குக் காட்டிக் கொண்டே இங்கும் அங்கும் ஒடி ஒடி, அவனுக்கு போக்குக் காட்டறார்.
காளியன் வாலைப் பிடித்து சுழற்றறார். அவனால் ஒண்ணும் பண்ணமுடியல. இந்த மாதிரி பல மணி நேரம் நடந்தபின், அவன் களைப்பாகிற நேரம் பாத்து அவன் தலை மேல ஏறி நின்னு ஆனந்தத்
தாண்டவம் ஆடறார்.
காளியனால் ஒண்ணும் பண்ணமுடியல. கண்ணனை கடவுள்ன்னு காளியன் புரிஞ்சுக்கறான்.”
”என்ன பண்றான், காளியன்.”
”கண்ணனிடம் மன்னிப்புக் கேட்கிறான்.”
”மன்னிப்புக் கொடுக்கிறாரா தாத்தா?”
”மன்னிப்பு கொடுப்பது தான் கடவுளின் செயல். யார் அவன் பாதத்தை அண்டினாலும் அவனுக்கு மன்னிப்புக் கொடுத்து .அவனை தன்னோடு இணத்து கொள்வது தான் கடவுளின் செயல் இல்லையா, அதனால், காளியனிடம் இனிமே யாருக்கும் நீ தொந்த்ரவு கொடுக்கக்கூடாது, அதனால் இந்த மடுவில் இருந்து உடனே கடலை நோக்கிப் போய்விடு, அப்ப்டிங்கறார் கண்ணன்.”
”காளியன் போயிடறானா தாத்தா?”
”ஆமாம் கண்ணா, காளியன் உடனே அந்த மடுவை விட்டு வெளியே போய் கடலுக்குப் போய் விடுகிறான்.”
”அப்பாடா, இப்பத்தான் எனக்கு உயிர் வந்தது தத்தா.”
”இந்தக் கதையை தான் பெரியாழ்வாரும், மற்றவர்களும் பாசுரமாகப் பாடியுள்ளார்கள், அதுலே ஒரு பாசுரத்தை தான் நான்
முன்னாலே பாடினேன், கண்ணா. மற்றவைகளை கீழே கொடுத்துள்ளேன்
                  காளியன் பொய்கைகலங்கப்பாய்ந் திட்டு, அவன்
            நீள்முடி யைந்திலும் நின்று நடஞ்செய்து,
                மீள் அவனுக் கருள்செய்த வித்தகன்
            தோள்வலி வீரமே பாடிப்பற்
                தூமணி வண்ணனைப் பாடிப்பற. 

என்று பெரியாழ்வார் பாடுகிறார். மேலும்,

   படவர வுச்சி தன் மேல் பாய்ந்துபல் நடங்கள் செய்து,
     மடவரல் மங்கை தன்னை மர்வகத் திருத்தி னானே,
   தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,
     கடவுளே! காவ ளந்தண் பாடியாய்! களைகணீயே.

என்று திருக்காவளம்பாடி என்னும் திவ்யதேசத்தைப் பற்றிப் பாடும்போது திருமங்கையாழ்வார் இந்த காளியன் நடனத்தைப் பற்றி பாடுகிறார்.
உன்னுடைய பாட்டி அதனைக் கோலமாகப் போட்டுள்ளார்கள் பார்.
கோலத்தில் காளிங்க நர்த்தனம்


                                                          


இந்தக் காளியின் மேல் நடனம் செய்ததை உன் மாதிரி குழந்தைகளுக்கு புரியும்படி படமாக்க் கொடுத்துள்ளார்கள்.
அதயும் பார். நன்றாக இருக்கும்.”
http://www.youtube.com/watch?v=52iZ3lUv41U தமிழில்
http://www.youtube.com/watch?v=z1p7Lo8nwNI&list=SPB973DBD69DB69061 ஆங்கிலத்தில்

சனி, ஆகஸ்ட் 31

போம் பழியெல்லாம் அமணன் தலையோடு போம்!!!!


என்னையா எழுதி இருக்கே, புரியவில்லையே?
யார் மேலே யார் பழி போடறாங்க?
இது ஒரு அரசனைப் பத்திங்க.


இதைப் படிச்சுட்டு ஏதோ நம்மூர்ல நடக்கற மாதிரி இருக்கேன்னு நினைச்சா
அதுக்கு நான் பொறுப்பல்ல, முன்னாலேயே சொல்லிட்டேன் என்ன!
அரசன்,
 'யாரங்கே! மாளிகை வாசல்ல இருக்கிற மணியை யாரோ அடிக்கறாங்க, யார்ன்னு  பாருங்க?'
 'யாரோ ஒரு பெண்மணி தான் மணியை அடிக்கிறாங்க அரசே ".
 "என்னம்மா உனக்கு பிரச்சனை? சும்மா இருக்க விடமாட்டிங்களே?"
 "எனக்கு நீதி வேண்டும் பெண்மணி? அரசே?"
 "நான் என்ன வச்சுண்டு தர மாட்டேன்னு சொன்னேனா, சொல்லும்மா என்ன விஷயம்?"
 "என் கணவன் இறந்து விட்டார் ஐயா."
 "எப்படி அம்மா இறந்தான்?"
 "அவர் ஒரு திருடன், நேற்றிரவு ஒரு வீட்டில் கன்னக்கோல் வச்சு திருடும் போது அந்த  வீட்டு சுவர் ஈரமா இருந்ததனாலே இடிஞ்சு, அவன் மேலே விழுந்து இறந்து விட்டார் ஐயா.  அதனாலே அந்த வீட்டுக்காரங்க எனக்கு நஷ்ட ஈடு தரணும்னு ஐயா உத்தரவு இடனும்."
 "இது நல்லா இருக்கே? கூப்பிடு அந்த வீட்டுக்காரனை? அவனுக்கு உடனே சம்மன்   அனுப்பு".
 மந்திரி உடனே எழுந்து, "அரசே, அவன் திருடன். ஒரு வீட்டில் திருடப் போய் இருக்கான்.  அவனை இறைவனே தண்டித்து இருக்கான். அதை விட்டுவிட்டு அந்த வீட்டுக்காரனை   தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?
 "மந்திரியாரே, நமது நாட்டில் நியாயம் செத்துவிட்டது என்று பின்னால் யாரும் சொல்லக்  கூடாது இல்லையா? அத்துடன் அரசனிடம் ஒரு பிரஜை மனு கொடுத்துள்ளாள்.  அதை விசாரிக்காமல் தீர்ப்பு கொடுத்துவிட்டான் சரித்திரத்தில் நாம் இடம் பெற்றுவிடுவோம்,  அது கூடாது மந்திரியாரே!"
 "நாளை நமது அரசபை கூடும். அந்த விட்டுக்கு சொந்தக்காரனை அரச சபையில் கொண்டு   வந்து நிறுத்த வேண்டும் என ஆணையிடுகிறேன். இத்தோடு அரச சபை கலையட்டும்."
  மறுநாள் காலை.
 வீட்டு சொந்தக்காரன், "அரசே, வீட்டு சுவர் இடிந்ததற்கு நான் காரணம் இல்லை."
 "பின் யார் காரணம் என்கிறாய்?"
 "அரசே,திருடன் வந்தபோது சுவர் ஈரமாக இருந்து இருக்கிறது. அதனால் தான் இடிந்து இருக்கிறது.  அதனால் சுவரைக் கட்டிய கொத்தனார் தான் திருடன் இறக்கக் காரணம். எனவே அவனை   விசாரித்துத் தீர்ப்புக் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்."  
 "மந்திரியாரே, இவன் சொல்வதும் சரிதான், கூப்பிடு அந்தக் கொத்தனாரை!"
 "அரசே, நீங்கள் செய்வது?"
 "சும்மா இரும், மந்திரி, எனக்கும் சட்டம் தெரியும்?"
 "நாளை கொத்தனாருடன் சபை கூடும்"
 "அரசே, நான் கொத்தனார், என்னிடம் என்ன கலவை கொடுக்கிறார்களோ, அதற்கு ஏற்பத் தான்   கட்டடம் அமையும் என்பது .புத்திசாலியான உங்களுக்குத் தெரியாதா? சித்தாள் அதிகத் தண்ணிரைக்   கலந்து வந்ததால் தான் சுவர் ஈரமாக இருந்து இருக்கிறது. எனவே சித்தாள் தான் திருடன் இறக்கக்   காரணம். என்னை விடுவிக்க வேண்டும் மன்னா."
 "நன்னா சொன்னே, நீ குற்றம் செய்யவில்லை. கூப்பிடு சித்தாளை!!"
 "மன்னா, நானோ படிக்காதவள், எனக்கு என்ன தெரியும் கலவையைப் பற்றியெல்லாம்?  இன்னைக்கு பார்த்து ஒரு பெரிய குடம் கொடுத்தார்கள், அதில் தண்ணீர் அதிகமாக  இருந்து இருக்கும், அதனால் நான் குற்றவாளி இல்லை. குடம் செய்த குயவனைத் கேட்க  வேண்டும் மன்னா."
 'ஆமாம், ஆமாம், நீ என்ன செய்வாய்? எல்லாவற்றுக்கும் காரணம் அந்த குயவன் தான்.
 யாரங்கே, கூப்பிடு அந்தக் குயவனை."
 "மன்னா, நான் குடம் செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியே ஒரு பெண் போய்க்   கொண்டிருந்தாள்,அவனைப் பார்த்துக்கொண்டே குடம் செய்ததால் கொஞ்சம் பெரிதாகப்   போய்விட்டது. என் மேல் என்ன தப்பு. எல்லாவற்றுக்கும் காரணம் அந்தப் பெண் தான் மன்னா. என்னை விடுவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்."
 "மந்திரியாரே, நான் அப்பவே சொல்லலை, எப்படிப் பாருங்கள் நம் திறமையை?'
 மந்திரி மன்னன் பாக்காத நிலையில் தலையில் அடித்துக் கொண்டார். இந்த மன்னனிடம் போய்  வேலைக்கு சேர்ந்தோமே என்று!!
 "நான் தான் மன்னா குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போன பெண்மணி."
 "ஆமாம், குயவன் குடம் செய்யும் போது அவனை ஒழுங்காக செய்யவிடாமல் என் செய்தாய்?  திருடன் இறந்ததற்கு நீ தான் காரணம். உனக்கு ஏன் தண்டனை தரக்கூடாது?"
 "மன்னா, மன்னியுங்கள். என் மேல் எந்த தவறும் இல்லை. நான் எனது துணிகளை வெளுக்க   வண்ணானிடம் கொடுத்து இருந்தேன். அவன்  திரும்பக் கொண்டு வர நேரம் ஆகியதால் அவனைப்  
 பார்த்து கேட்கலாம் என்று சென்று கொண்டிருந்தேன். என் மேல் எந்த.தவறும இல்லை மன்னா.  அந்த வண்ணான் தான் காரணமாக வேண்டும். அவனை தண்டியுங்கள் மன்னா."
 'மன்னா,துணிகளை வெளுக்க ஆறு பக்கம் சென்றேன். அங்கு ஒரு சன்யாசி உட்கார்ந்து இருந்தார்.  அவரை சற்றே விலகி இரும் ஐயா. என்றேன். நீண்ட நேரம் ஆன பிறகே அவர் அந்த இடத்தை   விட்டு விலகினார் அதனால் நேரம் ஆகிவிட்டது மன்னா. எனவே அந்த சன்யாசி தான் திருடன்  இறக்கக் காரணம். நான் இல்லை ஐயா.'
சந்நியாசி யிடம் மன்னன்,
 "என்ன, அந்த வண்ணான் விலகுன்னு சொன்ன போது நீ நகராமல் இருந்தாயா?",
 "-------"
 "நீ நகராமல் இருந்ததால் தானே அவன் வெளுக்க நேரம் ஆயிற்று?"
 "-------"
 'அதனால் தானே அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய துணியை தாமதித்து கொடுத்தான்?"
 '-------"
  "வரவேண்டிய துணி வரலேன்னு தானே அந்தப் பெண் குயவன் வழியில் குறுக்கிட்டாள்?"
 "-------"
 "குயவன் பெரிய குடம் செய்தது, பெரிய குடத்தில் தண்ணீர் சித்தாள் எடுத்தது, ஈரமான சுவரைக்    கொத்தனார் கட்ட காரணம், அதனால் சுவர் இடிந்து திருடன் இறக்க இவை எல்லாவற்றிற்கும்   காரணம் நீ என்பதை ஒத்துக் கொள்கிறாயா?"
 "---------"
 'இவன் எந்த பதிலையும்  சொல்லாமல்  எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டான், எனவே இவன் தான் குற்றவாளி. இவனைச்
 சிரச்சேதம் செய்யுங்கள். இது தான் என்னுடைய தீர்ப்பு. சபை கலையட்டும்."

ஹி,ஹி,ஹி,

 மன்னன் ஓரக்கண்ணால் தன்னுடைய தீர்ப்பு இப்படி இருந்தது பார்த்தாயா மந்திரியாரே  என்று வினவ, மந்திரி மனதுக்குள் அந்த சந்நியாசி ஊமையானபடியால் வாயைத் திறந்து  பதில் சொல்லவில்லை என்பதை மதிகெட்ட அரசனுக்கு எப்படி உணர்த்துவது என்று தெரியாமல்
 மன்னனைப் புன்முறுவல் பூத்தபடி சபையை விட்டு வெளியேறினார்.
 மக்களும் மன்னனுக்கு வாழ்த்து படித்தார்கள்.

 இதைத் தான் "போம் பழியெல்லாம் அமணன் தலையோடு போம்!!!!" என்றோம்.

சனி, ஆகஸ்ட் 10

கதை சொல்லும் பாசுரங்கள்----பகுதி-3



”என்ன கண்ணா, இன்னைக்கு இவ்வளவு லேட்?”
“வாசல்ல பாருங்க தாத்தா.”
“யாருடா, உன் நண்பர்களா? எதுக்கு வந்துருக்காங்க. நீங்கள்ளாம்
ஏதேனும் விளையாடப் போகிறீர்களா?”
”ஆமாம் தாத்தா, எங்க தாத்தா நன்னா கதை சொல்வாங்கன்னு
சொன்னேன், உடனே அவங்க அப்பா, அம்மாவெல்லாம் அவங்களையும்
போய் தாத்தா கிட்ட கதை கேளுங்க்ன்னு அனுப்பிட்டாங்க”.
“அப்படியா, வாங்க. இன்னைக்கு பெருமாள் யானை கூப்பிட்ட குரலுக்கு
பதில் சொன்ன கதையைப் பார்ப்போம்”.
“என்ன தாத்தா, யானைக்கெல்லாம் பெருமாள் பதில் சொல்வாரா?”
”பெருமாள் யார் கூப்பிட்டாலும் வருவார். அவரிடம் நம்பிக்கை வைத்து
யார் கூப்பிட்டாலும் வருவார்.”
“என்ன சின்னப் பசங்க நாங்க?”
“வருவார். அப்படி பெருமாள் உன்ன மாதிரி சின்னப் பையன் ஒருவன்
அவர் மேல நம்பிக்கை வைத்து கூப்பிட்ட கதையை அப்பறம் சொல்றேன்,
இப்போ எப்படி யானை கூப்பிட்டதுக்கு வந்தார்ன்னு பாப்போமா?”
கண்ணன் நண்பர்கள் எல்லாரும் ஆவலோடு கதை கேட்கத் தயாராக இருக்க,
தாத்தா கதையை ஆரம்பிக்கிறார்.
“யானை தினமும் ஒரு குளத்தில் இருந்து தாமரை புஷ்பத்தை பறித்துக்
கொண்டு வந்து கரையில் உள்ள பெருமாள் சிலைக்கு பக்தியோடு சமர்ப்பிக்கும்.
அன்னைக்கும் அதுபோல காலையில் குளத்தில் இறங்கி தாமரைப் புஷ்பத்தை
பறிக்க நினைத்தது. அதுக்குத் தெரியாது குளத்தில் ஒரு பெரிய முதலை
இருப்பது.”
“அய்யய்யோ, என்னாச்சு தாத்தா?”
"பார்த்தது முதலை, சரியான சாப்பாடு கிடைச்சுருக்கு, விடப்படாதுன்னு
நினைச்சு, யானையின் காலை தன்னுடைய பல்லால கவ்வித்து. அப்பத்தான்
யானைக்கு தெரிந்தது, முதலை தன் காலைப் பிடிச்சுருக்குன்னு.”
”அப்பறம் என்னாச்சு தாத்தா?”
“யானை முதலைக்கிட்டருந்து காலை எடுக்கப் பார்த்தது. ஆனா முதலை
விடறதா இல்லை. யானைக்கு வலி தாங்க முடியலை. முதலை தண்ணிக்குள்ள இருக்குறவரைக்கும் அதுக்கு பலம். அதனால எப்படியாவது அதை கரைக்கு இழுத்துண்டு வந்துடணும்ன்னு யானை கரையை நோக்கி இழுக்க, முதலை யானையை தண்ணீருக்குள் இழுக்க, ரெண்டு பேருக்கும் பெரிய போட்டி.”
“யானைக்கு கால் வலிக்கலையா தாத்தா?”
“ஏன் வலிக்கலை,  பயங்கரமான வலி. என்னன்னமோ பண்ணிப் பார்த்தது
யானை. முடியல. இனிமேல் தன்னால் முதலைக்கிட்டருந்து தன்னைக்
காப்பாத்திக்க முடியாதுன்னு தெரிஞ்ச்து."
"என்ன பண்ணிச்சு தாத்தா?”
“நம்மால முடியாததை பெருமாள்கிட்ட விட்டுடணும். பெருமாளே கதின்னு
சொல்லிட்டா எந்தக் கஷ்டம் வந்தாலும் அவர் பாத்துப்பார்”
“பெருமாள் பாத்துப்பாரா தாத்தா”.
“ஆமாம், இங்க நடக்கிறதையெல்லாம் திருப்பார்க்கடல்ல உக்காந்துண்டு
பாத்துண்டு இருக்கார் பெருமாள்.
“யானை என்ன பண்றது பாப்போம்” ன்னு மஹாலக்ஷ்மிக்கிட்ட சொல்றார்.”
“யாரு தாத்தா மஹாலக்ஷ்மி?”
“ஆமாம், சொல்ல மறந்துட்டேனே, அவங்க தான் பெருமாளோட மனைவி.
நமக்கெல்லாம் கேட்டதையெல்லாம் அள்ளித்தரும் மஹாலக்ஷ்மி தாயார்.
அவங்க பார்த்துட்டாபோறும் நம்ம கஷ்டமெல்லாம் தீரும்”.
“இனிமேல் தன்னாலே ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு யானைக்குத் தெரிந்தது. பெருமாள் தான் தன்னை காப்பாத்தமுடியும்ன்னு தெரிஞ்சு, உடனே,
’பரந்தாமா, என்னைக் காப்பாத்து’ன்னு அலறியது.
”பெருமாள் மஹாலக்ஷ்மியை பார்த்து, பார்த்தாயா,என்னைக் கூப்பிடுவான் என்று   சொன்னேன் அல்லவா?” என்று கூறினார்.
“போங்கள் உடனே போய் யானையைக் காப்பாத்துங்கள்” என்று மஹாலக்ஷ்மி
பெருமாளைப் பார்த்துக் கூறினாள்.
”உடனே, கருடவாகனத்தை அழைத்தார். அதில் மேல் ஏறி அமர்ந்து யானை
உள்ள குளத்தை அடைந்தார். தன் சக்கரத்தை பிரயோகித்து முதலையின் வாயிலிருந்து யானையின் காலை பிரித்தார். முதலை இறந்தது. யானையின் துயரம் தீர்ந்தது.”
“இத யார் தாத்தா பாடியிருக்கா?”
“இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்கிற மாதிரி திருமஙகை ஆழ்வார் தன்னுடைய பாசுரத்தில் திருவல்லிக்கேணி என்ற திவ்யதேசத்தைப் பற்றிப் பாடும் போது பாடியுள்ளார். அந்தப் பாசுரத்தைத் தான் கீழே கொடுத்துள்ளேன் கண்ணா”

              மீனமர் பொய்கை நான்மலர் கொய்வான்
       வேட்கையி னோடுசென்றிழிந்த,
             கான்மலர் வேழம் கையெடுத் தலறக்
       கராவதன் காலினைக் கதுவ
             ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து
       சென்றுநின் றாழிதொட்டானை,
             தேனமர் சோலை மாடமா மயிலைத்
       திருவல்லிக்  கேணிக்கண் டேனே.                             1076
”இந்தப் பாசுரத்துக்கு ஏற்றாற்போல் உன் பாட்டி கோலம் போட்டுள்ளதை பார்”
“அப்படியா தாத்தா, பிரமாதமா வரைந்து இருக்காங்களே!!!”

கோலத்தில்’ மேலே உள்ள் பாசுரம்

யானையின் துயரம் தீர மஹாவிஷ்னு கருடன் மேல்

வெள்ளி, ஆகஸ்ட் 2

கதை சொல்லும் பாசுரங்கள்----பகுதி-2


கதை சொல்லும் பாசுரங்கள்----பகுதி-2
”என்ன தாத்தா ரொம்ப நாளாச்சு கதை சொல்லி? எப்ப சொல்லபோறே?”
“ஒன்னுமில்லை கண்ணா, நிறைய வேலை இருந்தனாலே உனக்கு கதை சொல்லமுடியலயடா. மன்னிச்சுக்கோ. என்ன சரியா?”
“அதெல்லாம் சரி, இன்னைக்கு என்ன கதை சொல்லப்போறே?”
“போன தடவை என்ன கதை சொன்னேன் ஞாபகம் இருக்கா?”
“ஏன் இல்லாம, கிருஷ்ணன் அதான் கண்ணன் எப்படி பொறந்தான்னு சொன்ன. எப்படி மறக்க முடியும்.”
“சபாஷ்டா, நல்லா ஞாபகம் வச்சு இருக்கியே.”
“நாலாயிர திவ்யப் பிரபந்தம், அப்ப்டிங்கறது நிறைய பாடல்கள் ஆழ்வார்கள் பெருமாளைப் பற்றிப் பாடி இருக்கற ஒரு நூல்.. ஒவ்வொரு பாட்லகளிளேயும் நிறைய கதைகள் இருக்கு. அதில் இருந்து தான்
உனக்குக் கதை சொல்லிண்டு இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?”
“தெரியும் தாத்தா. போன தடவை ஆண்டாள்  பாடலை வச்சு கதை சொன்னே. இப்ப யாரோட பாட்டை வச்சு கதை சொல்லப் போற.”
”இன்னைக்கு திருமழிசை என்கிற ஊரில் இருந்து பாடல்கள் இயற்றிய திருமழிசையாழ்வார் பற்றிய கதை தான் உனக்குச் சொல்லப் போறேன்”
“எங்கே தாத்தா இருக்கு அந்த ஊர்?”
“சென்னைக்கு பக்கத்திலெ, திருவள்ளூர் போற வழியிலே இருக்கு திருமழிசை. அவர் ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் அவருடைய சிஷ்யன் கணிகண்ணன் என்பரோடு திருவெஃகா என்ற இடத்தில் பெருமானைப் தரிசித்துக் கொண்டு தங்கி இருந்த்தார்."
"அவர் என்ன செய்தார் தாத்தா?”
”திருமழிசையாழ்வார் கோயிலில் தங்கி பெருமாளுக்கு தொண்டு செய்து கொண்டு இருக்கும் போது, ஒரு வயதான  மூதாட்டியும் ஆழ்வாருக்கு துணை செய்தார். இதைப் பார்த்த ஆழ்வார்,
 ”உனக்கு என்ன வரம் வேண்டும்”, என்று கேட்டார்.
மூதாட்டி, “எனக்கு ஏதானும் வரம் கொடுப்பதா இருந்தா, எல்லாரும் என்னௌடைய வயதான தோற்றத்தைக் கண்டு கேலி செய்கிறார்கள், அதனால் நான் என்றும் மாறாத இளமை தோற்றத்தை எனக்குத் தர வேண்டும்”, என்று மன்றாடினாள்.
”அவ்வாறே ஆகட்டும்” என்று ஆழ்வாரும் அவரை இள்ம் பெண்ணாக மாற்றினார்.
“முடியுமா தாத்தா?”
“இது மட்டுமா முடியும். ஆழ்வார் பெருமாளோடே பேசி இருக்கார்”.
’அப்படியா தாத்தா”.
“ஆமாம்ப்பா, அந்தக் கதை இப்போ வரப்போறது”.
“சொல்லு தாத்தா”.
“அந்த ஊர்ல இருந்த பல்லவ ராஜா இந்தப் பெண்ணைப் பார்த்து, அவளைக் கல்யாணம் செய்து கொள்ள விருப்ப்பட்டான்.
அவளும் சரி என்று சொல்ல கலயாணம் இருவருக்கும் நடைப்ற்றது. வருஷம் ஆச்சு. ராஜா முதுமை அடைந்தார். ஆனா ராணி எப்போவும் போல இளமையாகவே இருந்தார். இதைக் கண்ட ராஜா ராணி கிட்ட,
“எப்படி நீ மட்டும் இளமையாக இருக்கே?’ ன்னு கேட்டார்.
ராணி, ” நான் இளமையாக இருக்கக் காரணம் திருமழிசையாழ்வார் தான்” என்று அவருடைய பெருமையைச் சொன்னாள்.
உடனே ராஜா, தன்னுடைய ஆட்களை அனுப்பி, ஆழ்வாரை வரச் சொன்னான். ஆழ்வார் வரமாட்டேன்னுட்டார். அவருடைய சிஷ்யன் கணிகண்ணனை வரச் சொன்னான். அவரிடம் ராஜா,
 “ என்னைப் புகழ்ந்து உன் குடுனாதார் பாடவேண்டும்”, என்று கேட்டான்.
ஆனா சிஷ்யன் கணிகண்ணன்,
“பெருமாளைத் தவிர வேறு எவரையும் பற்றி எம் குருநாதர் பாடமாட்டார்” என்றான்.
“அப்படின்னா நீ என்னைப் புகழ்ந்து பாடு”, என்று கணிகண்ணனுக்கு ஆணையிட்டான்.
”எம் குருநாதரை தவிர்த்து நான் யாரையும் பாட்மாட்டேன்” என்று ராஜாகிட்ட சொன்னான்.
“இப்படியெல்லாம் ராஜாகிட்ட சொல்ல முடியுமா, தாத்தா?”
“நாமன்ன ராஜாவைப் பார்த்து பயப்படுவோம், ஆனா அந்தக் காலத்திலெ யாரும் பயப்படமாட்டாங்க.”
“அப்ப என்ன ஆச்சு தாத்தா?”
”ராஜாவுக்கு கோபம் வந்துச்சு. கணிகண்ணை நாட்டை விட்டுச் செல்லும் படி உத்தரவிட்டான். கணிகண்ணனும் குருகிட்ட நடந்த விஷயத்தைச் சொல்லிட்டு, தான் திருவெஃகாவைவிட்டு செல்வதற்க்கு அனுமதிகேட்டான். திருமழிசையாழ்வார் உடனே, “சிஷயன் இல்லாத இடத்தில் எனக்கென்ன வேலை, நானும் உன்னோட வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு புறப்படத் தயாரானார். அதுக்கு முன்னாலெ,
பெருமான் கிட்ட,
              "கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
                மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
          செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
                பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"
என்று பாடினார் திருமழிசையாழ்வார்.”
“பெருமாள் கிட்ட என்ன சொன்னார் தாத்தா?”
“காஞ்சி மணிவண்ணா, கனிகண்ணன் ஊரை விட்டுப் போகின்றான், நானும் அவனோடே போகின்றேன், அதனாலே
நீயும் உன்னோட நாகபாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு என்னோட புறப்படு. அப்படின்னு அர்த்தம்”
“ஆழ்வார் சொன்னா பெருமாள் கேட்பாரா தாத்தா?”
“கேட்டாரே”.
“ஆமாம், உடனே பெருமாள் நாகப்பாயை சுருட்டிண்டு, மூன்று பேரும் ஊரை விட்டு ”ஓரிக்கை” என்ற ஊரில் போய் அன்னைக்கு இரவு தங்கினார்கள்.”
“அப்புறம் என்ன ஆச்சு தாத்தா?”
“காஞ்சிபுரம், பெருமாள் இல்லாததால் பொலிவை இழந்தது. விஷ்யம் என்னன்னு ராஜா வேலையாட்கள் கிட்ட கேட்டான்
மறுநாள் ராஜாவோட வேலையாட்கள் நடந்த விஷயத்தை ராஜாக்கிட்ட சொன்னாங்க. உடனே ராஜா தான் பண்ண தப்ப உணர்ந்தான். போய் ஆழ்வார் கிட்ட மன்னிப்பு கேட்டான், உடனே காஞ்சிபுரம் வரணும்ன்னு சொன்னான். ஆழ்வாரும் ராஜாங்கிறது பெருமாள் மாதிரின்னு சொல்லிட்டு, உடனே கிளம்பினார். பெருமாளைப் பார்த்து, 
                    "கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
                          மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
              செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
                        நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"
“கனிகண்ணனும் நானும் காஞ்சி போறோம், அதனாலே நீயும் பாயைச் சுருட்டிக் கொண்டு புறப்படடு கோயில்ல
போய் படுத்துக் கொள்” என்று சொன்னவுடன் பெருமாளும் பாம்பு படுக்கையை எடுத்துக் கொண்டு வந்து, மீண்டும்
கோயில்லெ போய் படுத்துக்கொண்டார். அதனால அந்த பெருமாளுக்கு “சொன்னவண்ணம் செய்த பெருமாள்” ன்னு
பேரு. “யதோத்காரி” ன்னும் கூப்பிடுவாங்க.”
“என்ன தாத்தா, பெருமாள் ஆழ்வார் சொல்றதல்லாம் கேட்டு இருக்காரே!!”
“ஆமாம், அந்தக் காலத்திலே மட்டுமில்ல, எப்பவும் பெருமாள் நாம் சரியாச் சொன்னா எப்பவும் கேட்கத் தயார். நான் முன்னாடி சொன்ன மாதிரி இப்ப செல்ல வச்சுண்டு விளயாடுறியா?”
“இல்ல தாத்தா, இப்பல்லாம் நான் நன்னாப் படிக்கிறேன்”.
“வெரிகுட், அப்படித்தான் இருக்கணும். சரி போய் தூங்கு, நாளைக்கு இன்னொரு பாட்டுக்கு கதை சொல்றேன்,”
“தாங்க்ஸ் தாத்தா, குட் நைட்”.

ஞாயிறு, ஜூலை 28

தர்ப்பணம் செய்யணுமா?

”வாப்பா, கோபாலா.எங்கே இவ்வளவு தூரம்?”
”ராமசாமி, சும்மா பார்த்துட்டு போகாலாம்ன்னு வந்தேன், ஆமா,
என்னப்பா பண்ணிக்கொண்டு இருக்கே?”
“இன்னிக்கு அமாவாசை, அதனால் த்ர்ப்பணம் பண்ணிண்டுருக்கேன்”.
“எதுக்கு த்ர்ப்பணம் பண்ணனும்?’
‘இது என்னப்பா கேள்வி? நம்ம தகப்பனார், தாயார், முன்னோர் ஆகியோருக்கு  அமாவாசை, கிரஹணம், அவர்கள் இறந்த திதி ஆகிய நாட்களில் தர்ப்பணம் பண்ணா போற வழிக்கு புண்ணீயம்ன்னு பெரியவர்கள் சொல்லி இருக்க்றது உனக்குத் தெரியாதா? இதென்ன புதுசா கேட்கிறே?”
”யார் போற வழிக்கு?”
“இதென்ன கேள்வி? அவர்களுக்குத் தான்.”
”அதில்லைப்பா, அவர்கள் தான் போய் சேர்ந்துட்டாங்களே, அப்பறம் அவர்களுக்கு எங்கே புண்ணியம் போய் சேரப் போறது?”
“இதென்ன விதண்டாவாதம் பேசறே?”.
"நான் சொல்லல்லை இதெ.”
“பின்ன யார் சொன்னாங்க?”.
“சென்ற ஞாயிறு அன்று திருவங்கத்தில் உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகளின் உபன்யாசம் ‘வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே’ என்ற தலைப்பில் பேசினார். அப்ப எதுக்குத் தர்ப்பணம், திதி இதெல்லாம் செயறது என்பதைப் பற்றியும், பாபம், புண்ணீயம் என்பதைப்
பற்றியும் பேசினார். அப்பத்தான் பாபத்தையும், புண்ணியத்தையும் தொலத்தாத்தான் வைகுந்தம் போகமுடியும். நாம் பண்ணற தர்ப்பணம், முன்னோருக்கு கொடுக்கிற திதி இவையெல்லாம் அவர்களுக்கு போய் சேராது. நம்ம கர்மத்தை தொலைத்தால் தான் நாம் வைகுந்தம் போக முடியுமாம். நம்ம முன்னோர்கள் அவர்கள் கர்மத்தை  லைத்திருந்தார்கள்
என்றால் அவர்கள் வைகுந்தம் போய் இருப்பார்களாம். நாம எள்ளும் தண்ணியும் இறைத்தால் நமக்குத்தான் புண்ணியம். அவர்களுக்கு அப்படியே போய்ச் சேராதாம்.
”பின்ன எப்படிப் போய் சேருமாம்”.
”அப்பறம் ஒரு உதாரணம் கொடுத்தார் பாரு, சூப்பர்.”
“என்ன?”
“இப்ப நம்ம செல்லுங்கற கைபேசியிலே பேசத்தானே செய்யறோம், மற்ற பக்கத்திலெ இருக்கிறவங்களுக்கு அப்படியே போய்ச் சேருதா?”
“அதெப்படி போய்ச் சேரும்?’. 
”அப்ப என்ன நடக்குது அங்க?”
“ஒலியை மின் அலைகளா மாற்றி அதன் அதிர்வெண்ணையும் அதிகரித்து, வேறொரு அதிர்வெண்ணோடு கலந்து ஏரியல் மூலமா அனுப்புறாங்க. மற்ற பக்கத்திலே இதெ தலைகீழா மாற்றி மீண்டும் ஒலி அலைகளா மாற்றின பிறகு நம் காதிலெ விழுது இல்லையா? (இதுக்குப் பேரு ஆங்கிலத்தில் modulation and demodulation என்று சொல்வார்கள்). அதுபோலத்தான் நாம எள்ளு தண்ணி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்கள் செய்த கர்மவினைப்படி இப்ப அவர்கள் என்ன பிறவி எடுத்து இருக்காங்களோ அதற்கு ஏற்றாற்போல், உதாரணத்துக்கு, அதாவது மாடு ஜன்மம் எனில் புல்லாக, போய் சேருமாம்.”
“பிரமாதமா இருக்கே, ஏன் விதண்டாவாதம் பண்ணறவங்களுக்கு கூட இது சரியாப் படுமே, இல்ல!
“அதோட விடல ஸ்வாமிகள், அந்த மாதிரி இறந்தவங்களுக்கு காரியம் ஸ்ரிங்கத்தில் பண்ணா விஷேஷம், அதுக்காக திருமங்கை ஆழ்வார், பெருமாளிடம் வேண்டி ஒரு படித்துறை கட்டி இருக்கான்னு சொல்லி
அதுக்கான் கதையையும் சொன்னார். 

(அந்தக் கதை ஊர் கூடி தேர் இழுப்போம் அன்ற தலைப்பில் முன்னர் எழுதி உள்ளோம்).”
”அதோடு இல்லாமல் அந்த காரியங்கள் செய்ய தன்னார்வ தொண்டு அமைப்பையும் நிறுவி கட்டடங்கள் கட்டிக் கொண்டு இருக்கா, அதுக்கு எல்லாரும் நிதி உதவி செய்யாணுன்னு வேண்டி கேட்டார்கள். நம்முடைய பொண்ணு பையன் வெளினாட்டுலே இருந்தா அவர்களிடம் இருந்தும் நிதி கேட்டு கொடுங்கன்னு வேண்டி கேட்டார்கள்”
“செய்ய வேண்டியது தான் அப்பா. அந்த விலாசம் சொல்லு, உடனே ஒரு தொகையை கொடுத்து போற காலத்துக்கு புண்ணியத்தைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்வோம்”. 

இது தான் அந்த அட்ரஸ்:
               "ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் ட்ரஸ்ட்"
 2008 ஆண்டு பதிவு செய்யப்பட்டு  முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. கொள்ளிடக்கரையில் 11000 சதுர அடி, 
ஒரு தர்ம சிந்தனை  கொண்ட குடும்பம் மூலமாக தானமாக பெறப்பட்டு, ட்ரஸ்ட் பெயரில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
நித்ய விதிகளுக்கு அறைகள், கிணறு, கரைப்பதற்கு குளம், தீட்டு இல்லாமல் காரியங்கள்  நடத்த தனியான இடம், 
கழிவறைகள், தடையில்லாத மின்சாரம் போன்றவைகளுக்கு  நன்கொடைகள் எதிர்பார்க்கிறார்கள்.
ராமனுக்கு அணில் செய்தது போல், ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். இதில் அளிக்கப்படும் நன்கொடைகள் 
80G பிரிவின் படி வருமான வரி விலக்கு உண்டாம்.
மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
                 ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் டிரஸ்ட்
                 23, ராஜாஜி தெரு, ரெங்கநகர், ஸ்ரீரங்கம்,திருச்சி-620006
                 போன்:0431-2433078,
                E-Mail:stmmtrust@yahoo.com




செவ்வாய், ஜூலை 23

எப்படி இருக்க வேண்டும் உறவுகள்?





ஒரு தகப்பனார் தன்னுடைய வயதான காலத்தில் தன் சொத்துக்களை
தன் இரு பையன்களுக்கும் சமமாக எழுதி வைத்து விட்டு இறந்து 
போனார். ஒருவனுக்குக் கலாயாணமாகி குழந்தைகள் உள்ளனர்.
மற்றவன் பிரம்மச்சாரி.
கல்யாணமான பையன் தன் மனைவியிடம்,
“கமலா,என் தம்பி ராகவன் கலயாணமாகவில்லை. அவனுக்கு என்று
வாரிசுகளும் இல்லை. வியாதி என்று கடைசி காலத்தில் வந்தால் 
அவன் கஷ்டப் படுவான், நமக்கோ குழந்தைகள் உள்ளனர்.
கடைசி காலத்தில் நம் குழந்தைகள் நம்மைக் காப்பாற்றும். எனவே
அப்பா நமக்கு என்று கொடுத்த சொத்தை ராகவனுக்குக் கொடுக்கலாம்
என்று நினைக்கிறேன், நீ என்ன நினைக்கிறாய்?”
”இதில் என்ன அப்பா சந்தேகம்.  இவ்வளவு நாட்கள் சொத்தை வைத்துக்
கொண்டிருந்த்தே தப்பு உடனே சித்தப்பாவுக்கு மாற்றி எழுதி விடுங்கள்”
அம்மா பதில் சொல்ல வருவதற்குள் குழந்தைகள் இருவரும் கோரசாக
அப்பாவுக்கு பதில் சொன்னார்கள்.
“அமாங்க, குழந்தைகள் சொல்வது தான் கரக்ட், போஙக உடனே மச்சினரிடம் கொண்டு போய் கொடுங்க”, மனைவி கமலா தன் கணவரிடம் சொன்னாள்.
”இதோ தம்பியை பார்க்கக் கிளம்பறேன்”.
”என்னங்க, வாசலில் யார் வந்திகிருக்கா பாருங்க?”, சட்டையை போட்டுக்கொண்டு கிளம்ப இருந்த கணவனை பார்த்து மனைவி சொன்னாள்.
“வாங்க சித்தப்பா, உங்களைப் பத்தித்தான் இப்ப பேசிகிட்டு இருந்தோம்,
நீங்களே வந்துட்டிங்க”, குழந்தைகள் வாசலில் சித்தப்பாவை பார்த்து
சந்தோஷத்தில் வரவேற்றனர்.
“என்ன அண்ணா, மன்னி, பசங்களா எல்லோரும் நலம் தானே”, ராகவன்
எல்லோரையும் குசலம் விஜாரித்தான்.
“நலம்தான் ராகவா, நீ எப்படி இருக்காய்? கமலா, தம்பிக்கு சாப்பிட சூடா
ஏதாவது கொண்டா. உன்னைப் பார்க்கத்தான் நானே கிளம்பிக்கொண்டு 
இருந்தேன். அதென்ன கையில் என்ன பை?”
“நலம்தான் அண்ணா, ஒண்ணும் இல்ல, குழந்தைகள், மன்னி, மற்றும்
உன்னைப் பாக்கணும் போல இருந்தது, அதான் கிளம்பி வந்துட்டேன்”
“காபியை சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க, தம்பி”, மச்சினரிடம் காபியை
கொடுத்துக் கொண்டே கமலா கூறினாள்.
”காபி நன்னாக இருக்கு மன்னி”.
“அது சரி என்ன விஷயம், உடம்பு ஏதும் சரியில்லையா ராகவா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டு
அதெ உடனே செயல்படுத்துடலாம்ன்னு தான் வந்தேன். நீங்க தப்பா
நினைக்க கூடாது”.
“அப்படி என்னடா தலை போற விஷயம், உடனே சொல்லாட்டா என்ன,
போன்ல சொல்லி இருக்கலாமே?”
“அதானே தம்பி, மெதுவா சொல்லிருக்கலாமே”.
“இல்ல மன்னி, அண்ணா. நல்ல காரியங்களை தள்ளிப் போடக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. அப்படித் தள்ளிப் போட்டா சமயங்களில் மனசு மாறி செய்யாம போயிடலாம். அதான் உடனே கிளம்பி வந்துட்டேன் அண்ணா”.
“என்ன சித்தப்பா பீடிகை எல்லாம் பலமா இருக்கு?”
”அப்படி இல்ல குழந்தைகளா, இப்ப எனக்கு யார் இருக்கா உஙகளை விட்டா? கடைசி காலத்திலே உங்க காலடியிலே வந்து விழுந்திட மாட்டேனா? நீங்க, அண்ணி, அண்ணா எல்லாரும் என்ன கரை சேர்த்துட மாட்டீங்களா?”
ஷாக்காகி, “திடீரென்னு அதுக்கு என்ன வந்ததுங்க?” மன்னி.
“அப்படி இல்லை மன்னி, நெருப்புன்னா வாய் வெந்துடுமா, எதுக்கும்
முன்னெச்சரிக்கையாக இருக்கணும் இல்லையா? அதோட அண்ணாவுக்கும் பெரிய குடும்பம், ரெண்டு குழந்தைகள், இவர்களுக்கு கல்யாணம் பண்ண வேண்டும், அதுக்கெல்லாம் செலவு அதிகமாகும்”.
“அதனால,”
“அதனால யோசிச்சேன், நானோ சம்பாதிக்கிறேன் அது எனக்குப் 
போறும். அப்பா கொடுத்த சொத்த வச்சுண்டு நான் என்ன
பண்ணப்போறேன், அத ரெண்டு கொழந்தைகள் பேருலெ மாத்தி
எடுத்துண்டு வந்திருக்கேன், மறுப்பு சொல்லாம வாங்கிக்கணும்”.
இப்படி சொல்லிக் கொண்டே பையைத் திறந்து டாகுமெண்டுகளை
குழந்தைகளை கூப்பிட்டு கொடுத்தான் ராகவன்.
குழந்தைகள்,அண்ணா, மன்னி, தம்பியை நினத்து வாயடைத்து நின்றார்கள்.
உறவுகள் இப்படி அல்லவா இருக்கவேண்டும்!!!!!!
எங்கேயோ கேட்டது தான்!!!!!

ஞாயிறு, மே 5

கதை சொல்லும் பாசுரங்கள்!!!!!!!!! முதல் பகுதி.



மதுரா



கதை சொல்லும் பாசுரங்கள்!!!!!!!!!
முதல் பகுதி.
”ஏண்டா கண்ணன், என்னடா பண்ணிண்டு இருக்கே?
”, எம் பேரனைப்  பார்த்துக் கேட்டேன்.
“இதோ வரேன் தாத்தா”.
“இல்லைடா, நீ என்னமோ செய்து கொண்டிருக்கியே, அதத் தான்
என்ன பண்ணீண்டு இருக்கேன்னு கேட்டேன்”.
என் பேரன் வயது நான்கு. இன்னும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. எல்லா வீட்டிலேயும் உள்ளது போல் என் பெண் வீட்டீலேயும், குழந்தைகளுக்கு என்னன்ன விளயாட்டுப் பொருட்கள் வேண்டுமோ அத்தனையும் பேரனுக்கு வாங்கி வைத்துளளார்கள். அதை வைத்துக் கொண்டு அவன் விளையாடுவான் என்று பார்த்தால், அவனோ கையில் ஐபோனை வைத்துக் கொண்டு அதில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். அவ்னின் கவனத்தை விலக்கும் பொருட்டுத் தான் அவனைக் கூப்பிட்டேன்.
தாத்தா பார்த்துவிட்டார் என்று தெரிந்து கொண்டு தான் அவனும் மேலே
சொன்ன பதிலைக் கொடுத்தான்.
நான் விடுவேனா?
“இங்கே வாடா, உனக்கு ஒரு கதை சொல்கிறேன், அப்புறம் ஐபோனில்
படம் பார்க்கலாம்”.
“என்ன கதை சொல்லப் போறே தாத்தா. எனக்கு கதைன்னா ரொம்ப
இஷ்டம்.”
“அப்படியா, இதுக்கு முன்னால எங்கேடா கதை கேட்டு இருக்கே?”
“ஆமாம் தாத்தா, எங்க ஸ்கூல்ல மிஸ் நிறைய கதை சொல்வாங்க தாத்தா”.
 ”என்னன்ன கதையெல்லாம் மிஸ் சொல்லி இருக்காங்க, எனக்கு ஒரு கதையைச் சொல்லுடா”.
“போ தாத்தா, நீ சொல்றேன்னு சொல்லிட்டு என்ன சொல்லச் சொல்றே”.
என்னை மடக்கி விட்டது போல் ஒரு பார்வை பார்த்தான்.
சொல்றது சரிதானே, நான் கதை சொல்றேன்னு சொல்லிட்டு, அவ்னைக்
கேட்டால்!
‘சாரிடா, நானே கதை சொல்றேன், அதுக்குப் பிறகு இந்த ஐபோனை வைத்துக் கொண்டு படம் பார்க்ககூடாது, என்ன நான் சொல்றது சரியா?”
“சரி தாத்தா, இனிமே இதை வச்சுண்டு படம் பாக்கமாட்டேன்”,ன்னு சொல்லி ஐபோனை மேஜையில் கொண்டு வச்சான்.
’என்ன கதையை ஆரம்பிப்போமா?”.
”இது ரொம்ப நாளைக்கு முன்னால் நடந்த கதை. இத அவதாரம்ன்னு
கூடச் சொல்லுவாங்க”.
“அவதாரம்ன்னா என்ன தத்தா?”
”எப்பல்லாம் நாம இருக்கிற உலகத்திலெ மக்களைக் கஷ்டப்படுத்துற அசுரர்கள் வராங்களோ, அவங்களை கொல்லறுதுக்காக கடவுள் அவ்தாரம் எடுப்பாராம்.”
“எடுத்து என்ன பண்ணூவார் தாத்தா?”
“அவதாரம் எடுத்து அசுரர்களைக் கொன்னு மக்களைக் காப்பாத்துவார்”.
“ஆமாண்டா, அது மாதிரி இந்த அவதாரம் கிருஷ்ணாவதாராம்ன்னு பேரு”
“இவர் என்ன பண்ணார் தாத்தா, யாரைக் கொல்ல இவர் பிறந்தார் தாத்தா?”
”ஆமாம், இவர் ஒருத்தரைக் கொல்லத்தான் பிறந்தார், அந்தக் கதையைத் தான் உனக்குச் சொல்லப் போறேன்”.
"இந்தியாவின் வடக்குப் பகுதியில், மதுராங்கற ஊர்ல உக்கிரசேனன்னு ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு கம்சன்ன்னு ஒரு பையன். தேவகின்னு ஒரு பொண்ணு. உக்கிரசேன ராஜா தன் பொண் தேவகிக்கு பக்கத்து ஊர்ல உள்ள வசுதேவன் அப்படிங்கிறவருக்கு கலயாணம் பண்ணி வைக்கிறான். மாப்பிள்ளையையும் பொண்ணையும் சாரட் வண்டிலெ ஏத்தி அவங்க ஊருக்குக் கொண்டு போய் உட்டுட்டு வாங்கறான் ராஜா.
கம்சன் கோபக்காரன். எல்லாரையும் கஷ்டப்படுத்துறவன். அவன் அப்பா சொன்னாக்கூட கேட்கமாட்டான்னா பாத்துக்கோ.”
“ஏன் தாத்தா, அப்பா சொன்னா கேட்கமாட்டேங்கறான். தப்புத் தானே?”
“அதனாலே தான் அவ்னை நாம அசுரன்னு சொல்றொம்.”
“நீ அப்பா, அம்மா சொன்னா கேட்பியா?”
“ஆமாம் தாத்தா, நான் அப்பா, அம்மா சொன்னா கேட்பேன்”.
“கதையைச் சொல்லு தாத்தா”.
”சாரட்டுலே போய்ண்டு இருக்கும் பொது வானத்திலேர்ந்து ஒரு குரல்,
’கம்சா, இவங்களுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும்”
அப்ப்டின்னு சொல்லுது.  இதைக் கேட்ட கம்சனுக்கு கோபம் அதிகமாகி,
தேவகியை கொன்னு போட்டுடலாம்ன்னு வரான். அப்ப
வசுதேவர் ”இவஙளுக்குப் பிறக்கப் போற குழந்தை தானே உன்னக் கொல்லப் போறது, அதனாலெ எப்பல்லாம் குழந்தை பொறக்கறதோ அப்பல்லாம் குழந்தையைக் உன்னிடம் கொண்டு வந்து கொடுக்கிறேன், அதனாலே தேவகியை  ஒண்ணும் செய்யாதே”, அப்படின்னு கெஞசறான்.
பாத்தான் கஞசன், “வசுதேவன் சொல்றதும் சரி”தான்னு நினைச்சு
அவங்க ரெண்டு பேரையும் யார் சொன்னாலும் கேட்காம, அப்பாவையும் ஜெயில்ல அடைச்சுறான்.
“அப்பறம் என்னாறது தாத்தா?”
“ஒவ்வொரு குழந்தையா பொறக்கறது.வசுதேவர் கம்சனிடம் கொழந்தையைக் கொடுத்தவுடன் கொன்னுடறான்.இது மாதிரி ஆறு குழந்தையைக் கொன்னுடறான். தேவகி ஏழாவது குழந்தை உருவாகும் போது பகவான் விஷ்ணு அந்தக் குழந்தையை வசுதேவரின் இரண்டாவது மனைவிக்கு மாற்றிவிடுகிறார். அவ்ருக்குப் பிறக்கும் குழந்தை தான் பலராமர். கம்சனிடம் ஏழாவது குழந்தை குறைப்பிரவசமாக முடிந்துவிட்டது என்று சொல்லிவிடுகிறார்கள்.
எட்டாவது குழந்தை தான் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் பிறக்கும் போது அடாது மழை. ஜெயிலுக்குப் பக்கத்தில் உள்ள
யமுனை ஆற்றில் வெள்ளம்.”
”குழந்தை பிறந்தவுடன் அப்பா, அம்மாவிடம் பேசினார்ன்னா பாரு”
”என்ன தாத்தா சொல்றே, குழந்தை பிறந்தவுடன் பேசுமா?”
“அவர் கடவுள் அவதாரம் இல்லையா, அதனால் பேசினார்”
“என்ன பேசினார் தாத்தா?”
”என்னைக் கொண்டு போய் யசோதாவின் அருகில் விட்டுவிடுங்கள். அங்கிருக்கும் பெண் குழந்தையை இங்கு கொண்டு வாருங்கள்”, அப்ப்படின்னு கிருஷ்ணன் வசுதேவரிடம் சொன்னார்.

”அதே பொலவே வசுதேவரும் குழந்தையை ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு  யமுனையை கடந்து சென்றார். அஞ்சு தலை பாம்பு ஆதிசேஷன் குடையா பிடிச்சுக்கிறார். யமுனை அவருக்கும் குழந்தைக்கும் வழி விடுகிறது. பின்னர் யசோதையின் பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து தேவகி அருகில்
விட்டு விடுகிறார்.”

”அப்புறம் என்ன ஆகிறது தாத்தா?”
”கம்சன் வந்து அந்தப் பெண் குழந்தையை கொல்லத் தயாராகிறான். அந்தச் சமயம் அவன் கையில் இருந்து விலகி, “உன்னை கொல்ல வந்த குழந்தை நான் அல்ல, அவன் வேறே எடத்துலே இருக்கான்னு”, சொல்லிட்டு மறைந்து விடுகிறது.”
”அப்புறம் என்ன நடக்குது தாத்தா?”
”அதுக்கப்பறம் நிறைய இருக்கு, அதெ இன்னொரு நாள் சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாலெ இந்தக் கதையை, ஒரு பாசுரமாக, ஆண்டாள் என்கிற பெண் குழந்தை தன் ’திருப்பாவை’ங்கிற முப்பது பாசுரங்களில் ஒரு பாசுரத்தில் எழுதி இருக்கிறார்.
“என்னது, பாட்டு எழுதி இருக்காங்களா தாத்தா? அது என்னது படிங்க தத்தா.”
அந்தப் பாசுரம் இது தான்.

   ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
                                             ஒருத்தி மகனா யொளித்து வளர
                                                          தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைத்த,
                                              கருத்தைப் பிழைப்பித்துக் கஞசன் வயிற்றில்,
                                                         நெருப்பென்ன நின்ற நெடுமாலே, உன்னை
                                              அருந்தித்து வந்தோம் பரைதருதி யாகில்,
                                                        திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி,

                                              வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

”வயதான பிறகு இதுக்கு அர்த்தம் தெரிஞ்சுப்ப, என்ன நான் சொலறது
புரியுதா?’
”அப்புறம் என்ன ஆச்சு தாத்தா கிருஷ்ணனுக்கு?”
“நீ இனிமே ஐபோனை வச்சு விளையாடாம இருக்கியா சொல்லு”.
“மாட்டேன் தாத்தா, இது மாதிரி கதை சொன்னா ஐபோனை எடுக்க மாட்டேன் தாத்தா”.
“வெரி குட், கிருஷ்ண்னின் கதையை அப்புறம் சொல்றேன்”
இந்தக் கதையை வீடியோ வடிவில் கீழே கொடுத்துள்ள லின்கை கிளிக்
செய்வதன் மூலம் கிருஷ்ணன் பிறப்பை பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FhRPrbr6Y9M#!

வெள்ளி, ஏப்ரல் 19

ஆய கலைகள் அறுபத்து ஐந்து?

ஆய கலைகள் அறுபத்து ஐந்து?
இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து?
அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம்?
அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்தேகம் வருதா?
அப்படின்னு கேட்கிறீர்களா?
அதாங்க, நடனம்ஆடுவது, பாட்டுப் பாடுவது, ஓவியம வரைவது இப்படி 64 விதமான கலைகள் ஒருவனுக்குத் தெரிந்து இருந்தால் அவன் மிகப் பெரிய அறிவாளியாம். இந்துமதம் சொல்லுகிறது.
கலைகள் பட்டியலைப் பாருங்கள். வாவ்!!!
இத்தனையும் ஒருவன் தெரிந்து கொள்ள எவ்வளவு நாட்கள் ஆகும் பாருங்கள்.
தன் வாழ்நாளைப் பூரா இதுக்கே செலவழிக்க வேணும், இல்லையில்லை பல ஜென்மங்கள் எடுத்து இதையே வேலையாகக் கொண்டிருந்தால் தான் இத்தனையும் கற்றுக் கொள்ள முடியும்.
ஒரு பழமொழி உண்டு "களவும் கற்று மற" அதாவது திருடக் கூடத் தெரிந்து இருக்க வேணுமாம்..
இதுலே ஒண்ணு பார்த்திங்களா? பட்டியலை இன்னொருதடவை படிங்க!!
உலகத்துல முக்கியமான ஒண்ண விட்டுடாங்க? அத அறுபத்து அஞ்சாவது கலையா சேர்த்து இருக்கணும், இல்லையில்லை, அதை முதல் கலையா வச்சு இருக்கணும்!!!!
அது தெரியலைன்னா வேறு எது தெரிஞ்சும் உபயோகம் இல்லைங்க!
வாத்தியார் பையனைப் பார்த்து கேட்கிறார்,
"உலகத்திலே நீக்கமற நிறைஞ்சு இருக்கறது எதுடா?" 'அதாண்டா எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது எது?"
ஒரு பையன் சொல்றான், "ஆகாயம் சார்".
இன்னொருத்தன் சொல்றான், "கடவுள் சார்". மற்றவன் "தண்ணிர்". அப்படிங்கறான். மற்றவன் "காற்று"
இப்படி ஆளாளுக்கு அவங்களுக்குத் தெரிந்ததைக் சொன்னாங்க.
"முட்டாப் பசங்களா, இதெல்லாம் அந்தக்காலத்துக்குப் பொருந்தும், எப்பவும் பொருந்தறுது எது தெரியுமா?"
"எது சார்"
"உலகத்துல நீக்கமற நிறைஞ்சு இருக்கறது லஞ்சம்." அப்படின்னாரே பாக்கணும்.
பசங்கள்ளாம் ஆடிப் போயிட்டாங்க!
என்ன வாத்தியார், இப்படி சொல்லித் தராறேன்னு பாக்கக்கூடாது, உலக
நடைமுறையை சரியா கண்டுபிடித்து விட்டார், வாத்தியார்.
பாருங்க, எங்க இல்ல லஞ்சம்?
ஆசுபத்திரிக்குப் போங்க, பியுனுக்கு ஏதாவது வெட்டினாத்தான் டாக்டரைப் பார்க்க சீட்டு கொடுப்பான்.
மின்சார ஆபீசுக்குப் போங்க, கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை கொடுத்தால் தான் உங்க வீட்டுலே மின்சாரத்தை "வரபோது" கண்ணுலே காண்பிப்பாங்க!!
இப்படி எங்க போனாலும் அவங்களுக்கு சேரவேண்டியது சரியாப் போனால் தான்
நம்ம காரியம் கை கூடும். லஞ்சம் எவ்வளவு கொடுக்கணும், எப்படிக் கொடுக்கணும் அப்படிங்கறது எல்லாம் ஒரு கலை.
என்ன காரியம் ஆகணும், அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் அப்படிங்கறதைப் பொறுத்து  லஞ்சம் மதிப்பு மாறும். இது  மட்டுமா
அது சரி, எப்படி இவர் வாங்குவாங்கன்னு தெரிஞ்சுக்கறது?  அவரே நேரே வாங்குவாரா?
வேறே யாருக்கிட்டேயும் கொடுக்கணுமா?
சரியான கேள்வி கேட்டிங்க?
இது  தெரியாமத்தான் நான் முழிச்சேன்!!!
என்னது?
லஞ்சம் கொடுக்கக் கூட தெரியாதா?
ஆமாங்க!! வெளிலே சொன்னா வெட்கம்!
இப்பக் கூட இத்தாலி நாட்டுலே வாங்கின ஹெலிகாப்டருக்கு யாரோ லஞ்சம் வாங்கிட்டாங்கன்னு பேசிகிட்டாங்க பாருங்க.
இதுக்குன்னு பல ஆட்கள் இருப்பாங்கன்னு  பின்னால தான் தெரிஞ்சுகிட்டேன்
நீ கொடுத்த அனுபவம் இருக்கான்னு கேட்கிறது காதுல விழறது. 
அந்தக் கதையே முதல்ல கேளுங்க 
எங்கப் பெரிய குடும்பத்திலே (எனக்கு நாலு தம்பிகள், நாலு தங்கைகள்). எப்படி அய்யா உங்க அப்பா ஜீவனம் பண்ணார்ன்னு கேட்கத் தோணுதோ?
எங்கும் கடன் வாங்காமல், தேவைக்கு அதிகமா எதையும் வாங்காமல்  காலத்தை ஒட்டி எல்லோரையும், படிக்க வைத்த, எங்க அப்பாவுக்கு நாங்க நன்றியைச் சொல்லணும்!!
நாங்கல்லாம் ஒண்ணா கூட்டுக் குடும்பமா இருந்த காலம். எங்க அப்பா,
வாங்க வேணாம் சொல்லியும் கேட்காமல், அரசாங்கம் கடன் தரான்னு, நண்பர்கள்
தொந்தரவு பொறுக்காம அரசு கூட்டுறவு சங்கத்தில் (housing board)ஒரு இடத்தை வாங்கி போட்டேன்.
சரி, வீட்டைக் கட்டலாம்ன்னு அரசிடம் கடனுக்கு விண்ணப்பித்தேன்.
முறையா முனிசிபாலிட்டி மற்றும் ஹவுசிங் போர்ட், ரெண்டு இடத்திலிருந்தும் வீட்டு பிளான் அப்ருவ் வாங்க விண்ணப்பித்தேன்.
இங்க ஆரம்பிச்சது சனி!!!
"என்னங்க, உங்களை அடிக்கடி நம்ம டீக்கடையில் பாக்கிறேன்? என்ன சார் விஷயம்?" ஹவுசிங் போர்ட் ஆபிஸின் அருகாமையில் உள்ள டீக்கடை முதலாளி தான், நான் அந்தக் கையில் அடிகடி டீ சாப்பிட வருவதைப் பார்த்து, மேலே சொன்ன கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டார்.
யாரிடமாவது என் பிரச்சனையை சொல்ல மாட்டோமா என உள்ளுக்குள் குமைந்து கொண்டு இருக்கும் போது ஆபத்பாந்தவராக டீக்கடை நாயர் எனக்குத் தெரிந்தார்.
"அதை ஏன் கேட்கிறீங்க? இதுவரை பலதடவை எங்க ஊர்லேந்து பஸ் சார்ஜ் செலவு  பண்ணி வந்துட்டேன், ஒவ்வோரு தடவையும் அந்த குமாஸ்தா ஏதாவது காரணம்  சொல்லி, "ரெண்டு நாள் கழித்து வாங்க, பாப்போம்",
அப்படின்னு சொல்லி என்னை அலக்கழிக்கிறார். என்ன பண்ணறதுன்னு தெரியலே..அதான் டீ சாப்பிட்டு கிளம்பலாம்ன்னு இருக்கேன். நீங்க கேட்டதால உங்க கிட்ட  புலம்பினேங்க, தப்பா நினைக்காதிங்க."
"அட நீங்க வேறே, உங்களைப் பாத்தா பரிதாமா இருக்குங்க, விஷயம் தெரியாம இருக்கீங்களே, முன்னாலேயே சொல்லி இருந்திங்கன்னா பஸ்சுக்கு இவ்வளவு  செலவு பண்ணி இருக்கவேண்டாமே?", நாயர்.
"என்ன சொல்றிங்க, நீங்க என்ன செய்ய முடியும்?" 
இதுதான் முக்கியமான இடம்!!  
முன்னால சொன்னேனே, "டீக்கடை நாயர்" தான் நமக்கு முக்கியமானவர். அவர் தான் இங்க தரகரா வேலை செய்கிறார்ன்னு அப்பவரைக்கும் எனக்கு தெரியாது. இப்படி லஞ்சப்பணம் கைமாற பல வழிகள்!!!
"கொடுங்க 50 ரூபாயை, கொஞ்ச நேரம் இருங்க, கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள்," ன்னு  சொல்லிட்டு என்னிடம் விவரங்களை வாங்கிக் கொண்டு ஆபீசுக்குள் போனார். போன வேகத்திலேயே திரும்பி வந்து
"இந்தாங்க, நீங்க கேட்ட வீடு கட்டுவதற்கான ஒப்புதல் கடிதம்" என்றாரே பாக்கணும்.ஆய கலைகள் அறுபத்து ஐந்து?
இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து?
அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம்?
அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்தேகம் வருதா?
அப்படின்னு கேட்கிறீர்களா?
அதாங்க, நடனம்ஆடுவது, பாட்டுப் பாடுவது, ஓவியம வரைவது இப்படி 64 விதமான
கலைகள் ஒருவனுக்குத் தெரிந்து இருந்தால் அவன் மிகப் பெரிய அறிவாளியாம். இந்துமதம்
சொல்லுகிறது. கலைகள் பட்டியலைப் பாருங்கள். வாவ்!!!
இத்தனையும் ஒருவன் தெரிந்து கொள்ள எவ்வளவு நாட்கள் ஆகும் பாருங்கள்.
தன் வாழ்நாளைப் பூரா இதுக்கே செலவழிக்க வேணும், இல்லையில்லை பல ஜென்மங்கள்
எடுத்து இதையே வேலையாகக் கொண்டிருந்தால் தான் இத்தனையும் கற்றுக் கொள்ள முடியும்.
ஒரு பழமொழி உண்டு "களவும் கற்று மற" அதாவது திருடக் கூடத் தெரிந்து இருக்க
வேணுமாம்..
இதுலே ஒண்ணு பார்த்திங்களா? பட்டியலை இன்னொருதடவை படிங்க!!
உலகத்துல முக்கியமான ஒண்ண விட்டுடாங்க? அத அறுபத்து அஞ்சாவது கலையா
சேர்த்து இருக்கணும், இல்லையில்லை, அதை முதல் கலையா வச்சு இருக்கணும்!!!!
அது தெரியலைன்னா வேறு எது தெரிஞ்சும் உபயோகம் இல்லைங்க!
வாத்தியார் பையனைப் பார்த்து கேட்கிறார்,
"உலகத்திலே நீக்கமற நிறைஞ்சு இருக்கறது எதுடா?" 'அதாண்டா எல்லா இடங்களிலும்
பரவி இருக்கிறது எது?"
ஒரு பையன் சொல்றான், "ஆகாயம் சார்".
இன்னொருத்தன் சொல்றான், "கடவுள் சார்". மற்றவன் "தண்ணிர்". அப்படிங்கறான். மற்றவன் "காற்று"
இப்படி ஆளாளுக்கு அவங்களுக்குத் தெரிந்ததைக் சொன்னாங்க.
"முட்டாப் பசங்களா, இதெல்லாம் அந்தக்காலத்துக்குப் பொருந்தும், எப்பவும் பொருந்தறுது
எது தெரியுமா?"
"எது சார்"
"உலகத்துல நீக்கமற நிறைஞ்சு இருக்கறது லஞ்சம்." அப்படின்னாரே பாக்கணும்.
பசங்கள்ளாம் ஆடிப் போயிட்டாங்க!
என்ன வாத்தியார், இப்படி சொல்லித் தராறேன்னு பாக்கக்கூடாது, உலக
நடைமுறையை சரியா கண்டுபிடித்து விட்டார், வாத்தியார்.
பாருங்க, எங்க இல்ல லஞ்சம்?
ஆசுபத்திரிக்குப் போங்க, பியுனுக்கு ஏதாவது வெட்டினாத்தான் டாக்டரைப் பார்க்க சீட்டு கொடுப்பான்.
மின்சார ஆபீசுக்குப் போங்க, கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை கொடுத்தால்
தான் உங்க வீட்டுலே மின்சாரத்தை "வரபோது" கண்ணுலே காண்பிப்பாங்க!!
இப்படி எங்க போனாலும் அவங்களுக்கு சேரவேண்டியது சரியாப் போனால் தான்
நம்ம காரியம் கை கூடும். லஞ்சம் எவ்வளவு கொடுக்கணும், எப்படிக் கொடுக்கணும்
அப்படிங்கறது எல்லாம் ஒரு கலை.
என்ன காரியம் ஆகணும், அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் அப்படிங்கறதைப்
பொறுத்து  லஞ்சம் மதிப்பு மாறும். இது  மட்டுமா
அது சரி, எப்படி இவர் வாங்குவாங்கன்னு தெரிஞ்சுக்கறது?  அவரே நேரே வாங்குவாரா?
வேறே யாருக்கிட்டேயும் கொடுக்கணுமா?
சரியான கேள்வி கேட்டிங்க?
இது  தெரியாமத்தான் நான் முழிச்சேன்!!!
என்னது?
லஞ்சம் கொடுக்கக் கூட தெரியாதா?
ஆமாங்க!! வெளிலே சொன்னா வெட்கம்!
இப்பக் கூட இத்தாலி நாட்டுலே வாங்கின ஹெலிகாப்டருக்கு யாரோ லஞ்சம் வாங்கிட்டாங்கன்னு
பேசிகிட்டாங்க பாருங்க.
இதுக்குன்னு பல ஆட்கள் இருப்பாங்கன்னு  பின்னால தான் தெரிஞ்சுகிட்டேன்
நீ கொடுத்த அனுபவம் இருக்கான்னு கேட்கிறது காதுல விழறது. 
அந்தக் கதையே முதல்ல கேளுங்க 
எங்கப் பெரிய குடும்பத்திலே (எனக்கு நாலு தம்பிகள், நாலு தங்கைகள்). எப்படி அய்யா
உங்க அப்பா ஜீவனம் பண்ணார்ன்னு கேட்கத் தோணுதோ?
எங்கும் கடன் வாங்காமல், தேவைக்கு அதிகமா எதையும் வாங்காமல்  காலத்தை
ஒட்டி எல்லோரையும், படிக்க வைத்த, எங்க அப்பாவுக்கு நாங்க நன்றியைச்
சொல்லணும்!!
நாங்கல்லாம் ஒண்ணா கூட்டுக் குடும்பமா இருந்த காலம். எங்க அப்பா,
வாங்க வேணாம் சொல்லியும் கேட்காமல், அரசாங்கம் கடன் தரான்னு, நண்பர்கள்
தொந்தரவு பொறுக்காம அரசு கூட்டுறவு சங்கத்தில் (housing board)ஒரு இடத்தை வாங்கி போட்டேன்.
சரி வீட்டைக் கட்டலாம்ன்னு அரசிடம் கடனுக்கு விண்ணப்பித்தேன்.
முறையா முனிசிபாலிட்டி மற்றும் ஹவுசிங் போர்ட், ரெண்டு இடத்திலிருந்தும் வீட்டு
பிளான் அப்ருவ் வாங்க விண்ணப்பித்தேன்.
இங்க ஆரம்பிச்சது சனி!!!
"என்னங்க, உங்களை அடிக்கடி நம்ம டீக்கடையில் பாக்கிறேன்? என்ன சார் விஷயம்?"
ஹவுசிங் போர்ட் ஆபிஸின் அருகாமையில் உள்ள டீக்கடை முதலாளி தான், நான்
அந்தக் கையில் அடிகடி டீ சாப்பிட வருவதைப் பார்த்து, மேலே சொன்ன கேள்வியை
என்னைப் பார்த்துக் கேட்டார்.
யாரிடமாவது என் பிரச்சனையை சொல்ல மாட்டோமா என உள்ளுக்குள் குமைந்து
கொண்டு இருக்கும் போது ஆபத்பாந்தவராக டீக்கடை நாயர் எனக்குத் தெரிந்தார்.
"அதை ஏன் கேட்கிறீங்க? இதுவரை பலதடவை எங்க ஊர்லேந்து பஸ் சார்ஜ் செலவு
பண்ணி வந்துட்டேன், ஒவ்வோரு தடவையும் அந்த குமாஸ்தா ஏதாவது காரணம்
சொல்லி, "ரெண்டு நாள் கழித்து வாங்க, பாப்போம்",
அப்படின்னு சொல்லி என்னை அலக்கழிக்கிறார். என்ன பண்ணறதுன்னு தெரியலே..
அதான் டீ சாப்பிட்டு கிளம்பலாம்ன்னு இருக்கேன். நீங்க கேட்டதால உங்க கிட்ட
புலம்பினேங்க, தப்பா நினைக்காதிங்க."
"அட நீங்க வேறே, உங்களைப் பாத்தா பரிதாமா இருக்குங்க, விஷயம் தெரியாம
இருக்கீங்களே, முன்னாலேயே சொல்லி இருந்திங்கன்னா பஸ்சுக்கு இவ்வளவு  செலவு
பண்ணி இருக்கவேண்டாமே?", நாயர்.
"என்ன சொல்றிங்க, நீங்க என்ன செய்ய முடியும்?" 
இதுதான் முக்கியமான இடம்!!  
முன்னால சொன்னேனே, "டீக்கடை நாயர்" தான் நமக்கு முக்கியமானவர். அவர் தான்
இங்க தரகரா வேலை செய்கிறார்ன்னு அப்பவரைக்கும் எனக்கு தெரியாது. இப்படி லஞ்சப்பணம்
கைமாற பல வழிகள்!!!
"கொடுங்க 50 ரூபாயை, கொஞ்ச நேரம் இருங்க, கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள்," ன்னு
சொல்லிட்டு என்னிடம் விவரங்களை வாங்கிக் கொண்டு ஆபீசுக்குள் போனார். போன வேகத்திலேயே
திரும்பி வந்து
"இந்தாங்க, நீங்க கேட்ட வீடு கட்டுவதற்கான ஒப்புதல் கடிதம்" என்றாரே பாக்கணும்.
"எப்படிங்க இதெல்லாம்?"
"அதெல்லாம் எதுக்குங்க, ஊருக்குக் கிளம்புங்க,அடுத்த கட்ட வேலையைப் பாருங்க"
என்று சொல்லிவிட்டு அடுத்தவருக்கு டீ போடப் போய்விட்டார்.
இது தான் என் முதல் லஞ்சம் கொடுத்த அனுபவம்,
அது அப்படின்னா, முனுசிபாலிட்டி அனுபவம் வேறே மாதிரி!! 
"இத பாருங்க சார், ஒரு பிளாட்டுக்கு 330ன்னு நிர்ணயம் செய்து இருக்கோம், இது எனக்கு
மட்டும் இல்ல, இங்க வேலை செய்யற எல்லாருக்கும் பங்கு உண்டு, நீங்க தனித்தனியா
ஒவ்வொருத்தருக்கும் கொடுக்க வேணாம், கொடுத்திங்கன்னா இன்னைக்கு சாயங்காலம்
ஒப்புதல் கடிதத்தை வாங்கின்டு போகலாம், இல்லன்னா நான் ஒருவாரம் லீவு, முனிசிபல்
சேர்மன் அடுத்த வாரம் லீவு, எப்ப உங்களுக்கு கடிதம் கிடைக்குமுன்னு சொல்லமுடியாது,
பாத்துக்குங்க!"
நேரடியா விஷயத்துக்கு விட்டார் .டவுன் ப்ளானிங் ஆபிசர்.
யோசனை செய்தேன், லேட்டாகும் ஒவ்வொரு நாளும் கம்பி, சிமெண்ட், மணல், கொத்தனார்
சம்பளம் இவையெல்லாம் விலை ஏறிக் கொண்டே இருப்பதைப் பார்த்தால் இவர் ஒண்ணும்
அதிகமா கேக்கலைன்னு தோணித்து.
"சரி சார், சாயங்காலம் வந்து வாங்கிக்றேன்" ன்னு சொல்லிட்டு வெற்றி வீரானாக நடையைக்
கட்டினேன். 
இப்படி வாங்கற விதம் பல விதங்கள். ஒரு இடத்தில மேஜை டிராயரை திறந்து வைத்து
இருப்பார்கள்.
அந்த அனுபவம்தான் எனக்கு பின்னால பல விதங்களில் உதவியது. என் காரியங்களை
நடத்திக் கொள்ள லஞ்சம் வாங்குறவங்க. யாரவது இருக்காங்களான்னு தான் பாப்பேன்.
"யாருக்காவது ஏதாவது கொடுக்கணும்ன்னா சொல்லுங்க", அப்படின்னு அவருக்கிட்டேயே பிட்டை
போட்டு ஆரம்பித்து விடுவது தான் என் டெக்னிக்.
நீங்களும் அதையே பாருங்க, பிழைச்சுபீங்க
     

)


.

அறுபத்து நான்கு கலைகள்

1. இசைக்கலை ( இசைக் கருவிகள் மீட்டுதல் )
2. நடனக் கலை ( ஆடற்கலையில  தேர்ச்சி பெற்று நடனமாடுதல் )
3. ஒவியக்கலை ( தூரிகையால் வண்ணங்களைப  பயன்படுத்த சித்திரங்கள் வரைதல் )
4.அலங்காரக் கலை ( நெற்றியில் அழகழகான திலகங்களை வைத்து அலங்காரம்
செய்து கொள்ளுதல் )
5.தரை அலங்காரக் கலை ( நானாவித் கோலப் பொடிகளாலும  மலர்களாலும 
தரையை அலங்காரம் செய்தல் )
6.அறைகளை அலங்கரிக்கு கலை ( வண்ணங்கள், பூக்களால் அறைகளையும்
சுவர்களையும் அலங்காரம் செய்தல் )
7.ஒப்பனைக் கலை ( உடல், உதடுகள், பற்கள், நகங்கள், உடைகள் போன்றவற்றை
அழகு மிகச் செய்தல் )
8.வண்ணக் கற்கள் கலை ( வண்ணக் கற்கள், நவரத்தினங்கள் போன்றவற்றை
 வைத்து அலங்காரம் செய்தல் )
9.படுக்கை அலங்காரம் கலை ( அவசியம், காலம், காரணத்திற் கேற்ற வகையில்
படுக்கைகளை அலங்காரம் செய்தல் )
10.ஜலதரங்கக் கலை ( சிறு சிறு கிண்ணங்களில் நீர் நிரப்பி, குச்சிகளால 
அவற்றைத் தட்டி இசை எழுப்புதல் )
11.நீச்சற் கலை ( நீரில் மீன்போல் நீந்துவதுடன் மற்ற நீர் விளையாட்டு
களளையும் அறிந்து கொள்ளுதல் )
12.மந்திர, தந்திரக் கலை ( மந்திர, தந்திரங்கள ஒரளவு கற்றுத் தேவைப்படும
 போது அவற்றைப் பயன்படுத்துதல் )
13.மலர்க் கலை ( பலவகையான மலர்களைக் கொண்டு மலர் அலங்காரங்களைத்
தயாரித்தல் )
14.மலர் அலங்காரக் கலை ( பல வகையான மலர்களால் மலர்க்கிரீடம்,
மலர்ச்செண்டு போன்றவற்தை தயாரித்தல் )
15.உடை அலங்காரக் கலை ( உடை அலங்காரத்த அறிந்து தேவைப்படும
 வகையில் நேர்த்தியாக உடைகளை அணிந்து கொள்ளுதல் )
16.செவி அலங்காரக் கலை ( செவிகளை அலங்காரம் செய்யும் ஆபரணங்களை
உருவாக்குவதை அறிந்து வைத்திருத் தல் )
17.வாசனாதி திரவியக் கலை ( வாசனைப் பொருள்களை, வாசனாதி திரவியங்கள
  தயாரிக்கக் கற்றிருத்தல் )
18.ஆபரண அலங்காரக் கலை ( நகைகள், நவரத்தினங்கள், அலங்காரப் பொருள்களை
அழகாக அணிந்து கொள்ளுதல் )
19.மாயாஜாலக் கலை ( சில மாயாஜால வித்தைகளை கற்று வைத்திருத்தல் )
20.உணர்ச்சி தூண்டல் கலை ( உடலுறவிற்கான உணர்வைத் தூண்டக்கூடிய
  வழிகளைக் கற்றிருத்தல் )
21.கரக் கலை ( கைகள், கைவிரல்களால் பலவித நளிவு சுழிவுகளைசச் செய்து
உணர்வைத் தூண்டுதல் )
22.சமையற் கலை ( சமையற்கலையி நல்ல தேர்ச்சி பெற்று விளங்குதல் )
23.பானத் தயாரிப்புக் கலை ( பல வகையான பானங்கள், சோம பானம்
 போன்றவற்றைத் தயாரிக்கக் கற்றிருத்தல் )
24.தையற்கலை ( தையற்கலை, ஆடை பின்னுதல் போன்றவற்றில் தேர்ச்சி
 பெற்றிருத்தல் )
25.பூத் தையற்கலை ( நு}ல் இழைகளால் ஒலிகளை வாயினால் எழுப்பக்
கற்றிருத்தல் )
26.பாவனைக் கலை ( இசைக் கருவிகளின் ஒலிகளை வாயினால் எழுப்பக்
கற்றிருத்தல் )
27.புதிர்க் கலை ( புதிர்களை, வேடிக்கை கணக்குகள், வினோதப் பேச்சுகளை
 அறிந்து வைத்திருத் தல் )
28.கவிதைப் போட்டிக் கலை ( கவிதை மூலமாகப் கேட்கப்படும் கேள்விகளுக
 கவிதை மூலமாகப் பதில் சொல்லும் திறன் )
29.சொற் கலை ( பல்வேறு பொருள்களைக் கொண்ட சொற்களை அறிந்து
 வைத்திருத்தல் )
30.வாசிப்புக கலை ( இலக்கியம், இதிகாசம், பு[ராணங்களை இசை, பாவங்களுடன
  படிக்கக் கற்றிருத்தல் )
31.வரலாற்றுப பயிற்சிக் கலை ( சரித்திர, புராண, வரலாற்று நிகழ்ச்சிக ளை
அறிந்து வைத்திருத்தல் )
32.கவிதை படைக்கம் கலை ( இடையில் விடுபட்ட சொற்களை இணைத்துக்
கவிதையை முழுமையாக்கத் தெரிந்து வைத்திருத்தல் )
33.பிரம்புக் கலை ( பிரம்பு, சட்டம், மரம் போன்றவற்றால் பொருள்களைத
  தயாரிக்கக் கற்று வைத்திருத்தல் )
34.பாத்திர அலங்காரக் கலை ( தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உருவங்கள்,
மலர்க்களை வரையக் கற்றிருத்தல் )
35.தச்சுக் கலை (மரத்தினால சாமன்களைத் தயாரிக்கக் கற்று வைத்திருத்தல் )
36.களிமண் கலை ( களிமண், பஞ்சு போன்றவற்றால் உருவங்களை உருவாக்கக்
கற்றிருத்தல் )
37.போர்ப் பயிற்சிக் கலை ( ஆயுதங்களை பற்றியும் போர்த்திறன பற்றி தெரிந்து
 வைத்துகொள்ளுதல் )
38.புகழ்ச்சிக் கலை ( மற்றவர்களின் திறனுக்கேறப அவர்களைப் புகழ்வதற்கு
 தெரிந்து வைத்திருத்தல் )
39.குழந்தை விளையாட்டுக் கலை ( குழந்தைகளை மகிழ்விக்கவும் விளையாட்டு
களைப் பற்றி அறிந்து வைத்திருத்தல்; )
40.சதுரங்க விளையாட்டுக் கலை ( சதுரங்கம், தாயக்கட்டம் போன்றவற்றை
விளையாடுவதற்கு தெரிந்து வைத்துகொள்ளுதல் )
41.உடற்பயிற்சி கலை ( பல வகையான உடற்பயிற்சி செய்வதற்கு கற்று
 வைத்திருத்தல் )
42.சூதாட்டக் கலை ( பல வகையான சூதாட்டங்களை விளையாட கற்றுவைத்திருத்தல் )
43.தோற்ற மாற்றம் கலை ( மற்றவர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத
 வகையில், உருவத்தை மாற்றி அமைத்துகொள்ளும் முறைகளை அறிந்து
வைத்திருத்தல் )
44.வீடு கட்டும் கலை ( சிறிய வீடுகள், பெரிய வீடுகள் போன்றவற்றைக் கட்டும்
முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
45.நாணயப் பரிசோதனைக் கலை ( தங்கம், வெள்ளி நாணயங்களையும்,
 நவரத்தின ஆபரணங்களையும் பரிசோதித்துப் பார்த்து அவற்றின் தரத்தை
மதிப்பிடும  முறை அறிந்திருத்தல் )
46.இரசாயணக் கலை ( இரசாயணப் பொருள் மற்றும் உலோகப் பொருள் தெரிந்து
 வைத்திருத்தல் )
47.பளிங்குக் கலை ( பளிங்கு போன்றவற்ற பொருள்களை உருவாக்கும்
 முறைகளைக் கற்று வைத்திருத்தல் )
48.தோட்டக் கலை ( தோட்டத்தில் பல வகையான் செடி, கொடிகளை வளர்க்கக்
கற்றிருத்தல் )
49.பிராணிச் சண்டைக் கலை ( ஆடு, சேவல் போன்றவற்றைச் சண்டையிடப் பயிற்சி
 கொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
50.பறவைப் பயிற்சிக் கலை ( கிளிகள், மைனாக்களுக்குப் பேசக் கற்றுக்
கொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
51.உடற் புத்துணர்வுக் கலை ( உடலைத் தேய்த்து அமுக்கி, பிடித்துப்
புத்துணர்ச்சி ஏற்படுத்தக் கற்று வைத்திருத்தல் )
52.மொழி பெயர்ப்புக் கலை ( வேற்று மொழிகளில் எழுதப்பட்டிருப்பவற்றை
 மொழி பெயர்க்க அறிந்து வைத்திருத்தல் )
53.குறியீட்ட  மொழிக் கலை ( குறிப்பேடு களிலுள்ள குறியீடுகளுக்கு
அர்த்தம் சொல்லத் தெரிந்து வைத்திருத்தல் )
54.புதுத்தோற்றம் ஏற்படுத்தும் கலை ( பருத்தித் துணியைப் பட்டு போல்
 தோற்றமளிக்கும் வகையிலும், தரம் குறைந்த பொருள்களை உயர்ரகப்
 பொருள்கள் போல் தோற்றமளிக்கும் வகையிலும் மாற்றுவதற்கு அறிந்து
 வைத்திருத்தல் )
55.குணாதிசயங்களை அறியும் கலை ( ஒருவரின் தோற்றத்தைக் கொண்டு
 அவருடைய குணாதிசயங்களை அறியத் தெரிந்து வைத்திருத்தல் )
56.அகராதிக் கலை ( அகராதிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல் )
57.பிற மொழிக் கவிதைப் பயிற்சிக் கலை ( பிற மொழிகளிலும் கவிதை புனைய
அறிந்து வைத்திருத்தல் )
58.மனப்பாடக் கலை ( கவிதைப், பாடல்கள், இதிகாசப் பாடல்கள், கிராமியப் பாடல்கள்
 போன்றவற்றின் முதல் அடியைக் கேட்டதுமே அப்பாடல் முழுவதையும்
ஒப்புவிக்கும் திறனைப் பெற்றிருத்தல் )
59.நினைவாற்றல் பயிற்சிக் கலை ( நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ளும்
 முறை )
60.உபகரணத் தயாரிப்புக் கலை ( இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை
இயக்கக் கூடிய உபகரண்களைத் தயாரிக்கும் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
61.சகுனக் கலை ( வெளியே புறப்படும் போது தெரியும் சகுனங்களைப் பற்றியும்,
பழக்க வழக்கங்கள் , சடங்குகள் போன்றவற்றை ப் பற்றியும் அறிந்து வைத்திருத்தல் )
62.மலர் வண்டிக்கலை ( மலர்களாலேயே சக்கர வண்டிகள், இரதங்கள் போன்றவற்றை அழகாகத் தயாரிக்கும்
முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
63. கட்கத்தம்பம்
64.வேற்று மொழிக் கலை ( பல நாட்டு மொழிகளையும் பழக்க வழக்கங்களை
 யும் தெரிந்து வைத்திருத்தல் )

புதன், மார்ச் 27

நடையா இத்ய் நடையா1


அரஙகநாதர் கர்ப்பகிருஹத்தில் இருந்து வெளியே வரும்போது
நடப்பார் பாருங்கள் அது நடை!
சிம்ம கதி, கஜ கதின்னு பல வகையிலே அவர் நடப்பதை இன்னைக்குப் பூரா பூரா பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
அரசியல்வாதிகளைப் பாருங்க, ஏதாவது காரணத்துக் நடைப் பயணம் ன்னு கிளம்பிடுவாங்க!
ஃபேமஸ்ஸான்ன நடைன்னா, காந்தியடிகள் உப்பு சத்தியாகிரஹத்தின் போது நடந்த்தைச் சொல்லலாம்.
உலக அழகிகள் மேடையிலே நடப்பதை பூனை நடைன்னு(cat walk)ன்னு சொல்வாஙக இல்லையா?
சிவாஜி சார் ஒரு படத்திலெ, ”நடையா இது நடையா, ஒரு நாடக மன்றம் நடக்குது” ன்னு ஹீரோயினைப் பார்த்து பாடுவார் பாருங்கள். அந்தப் பாட்டு அந்தக் காலத்தில் ஃபேமஸ்.
ஒரு ஜோக் உண்டு, “டாக்டர் சார், நீங்க சொன்ன மாதிரி வீட்டிலிருந்து
10 மைல் நடந்து வந்துட்டேன் டாக்டர், இப்ப திரும்பிடலாமா”, அப்படின்னு ஒரு நாள் நடந்ததைப் பெருமையா பேசரவங்கள்ளாம் இங்க உண்டு.
”அப்படி என்ன சார் விசேஷம் நடையிலே”, அப்படின்னு நீங்க கேட்கிறது
காதுலே விழறது.
இல்லையா பின்ன, நடக்கிறதுலே அவ்வளவு இருக்குங்க!
மனிதாகள் நடக்கப் பிறந்தவங்க சார்.
30 நிமிஷம் நடங்க தினமும், சக்கரை வியாதி வரதை 50 மடங்கு குறைத்து
விடுமாம்!
60 வயதுக்கு மேல் உள்ளவங்களுக்குசக்கரை வியாதி வரதை 70% குறைத்து விடுமாம்.
100000 மைல் நீளமுள்ள ரத்த நாளங்கள், நடப்பதால் புத்துணர்வு பெறுதாம்.
பெண்கள் நடப்பதால் அவர்களுக்கு மார்பகப் ப்ற்று நோய் வருவதை 20%
சதவீதம்  குறைக்க முடியுமாம்.
அது மட்டுமா,ஏற்கனவே புற்று நோய் உள்ளவர்கள் நடப்பதால் அவர்களின் புற்று நோய் குறைவது மட்டுமல்லாமல் , அவ்ர்களின் வாழ்நாள் 50%


சதவீதம் கூடுதாங்க!
நடப்பது வியாதி வருவதைக் குறைக்கிறது, வியாதி இருந்தால் அதனை
மிக வேகமாக நீக்குகிறது. ரத்தவோட்டம் அதிகரிக்கிறது, heart attack
வருவதைக் தடுக்கிறது.
எலும்புகள் வளர்வதை அதிகரிக்கிறது.
அதுசரி, எத்தனை தூரம் நடப்பது?
ஒண்ணுமில்ல, தினமும் அரை மணி நேரம் நடங்க போறும்!
அப்புறம் பாருங்க உங்க உடம்பை, நாம் நாமான்னு சந்தேகப் படுவோம்!
“எஙக சார் ஆளக் கானோம், ஒ, நடக்கப் கிளம்பிட்டீங்களா?”
”வாழ்த்துக்கள்”, ‘அடுத்த தடவை வியாதி இல்லாத மனுஷனா உங்களைப்
பார்ப்போம்’.

ஞாயிறு, மார்ச் 10

இன்னம்பூர் நினைவுகள்

பச்சைப் பசேல் என்று, பச்சைக் கம்பளம் விரித்தாற்ப் போல்
எஙகு பார்த்தாலும் வயல் வெளிகள். கீச்கீச் என்று குருவிகள் தங்கள்
கூட்டிலிருந்து வெளியே வரும் குரலோசை.
சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்த சோலை. எப்போது இந்த ஊரைப்
பார்ப்போம் என்று இளஞ்சூரியன் தன் பொன்னிற கிரணங்களை இந்த
ஊரை நோக்கி பாய்ச்ச்த் தயாராக இருக்கிறான். அந்தப் பொன்னிற காலை வேளை. அக்கிரஹாரத்து இளஞ்சிட்டுக்கள் தங்கள் வீட்டு வாசலைத் தெளித்து மாக்கோலம் போட்டுக் கொண்டு இருக்கும் சம்யம்.
இந்த மாதிரி இந்தக் காலத்திலும் ஒரு ஊர் இருக்கா என்று கேட்காதீர்கள்,
சாதாரண ஊர் அல்ல அது, 

அறுபத்து நாயன்மார்களில் ஒருவரால் பாடல் பெற்ற ஸ்தலம். அதுமட்டுமா முகமதிய படையெடுப்பின் போது  அரங்கனே திருவரங்கத்தில் இருந்து பல இடங்களுக்கும் சென்று
திருமலையில் தஞ்சம் அடந்த நேரத்தில், அங்கிருந்து கொண்டு
கொண்டு வரப்பட்ட ஸ்ரீனிவாசன் விக்கிரஹத்தை வைத்து கோயில் எழுப்பபட்ட ஊர்தான் அது.
இன்னம்பூர் தான் அந்த ஊர். 



இன்னம்பூர் சிவாலய வரலாறு

சிவாலய குருக்கள்

எழுத்தரிநாதர்

அழுத்தரிநாதர் சன்னிதி

தூரத்தில் எழுத்தரிநாதர்



அம்ம்பிகை சுகந்த குந்தாளாம்பாள்

எழுத்தரிநாதர்





 இது எங்க ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தனி பெருமை உண்டு. கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக் களம் எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள திருபுறம்பியம் ஆகும்.
துர்வாச முனிவர் சாபத்தால் காட்டு யானையாகி அல்லலுற்றது ஐராவதம். ஷண்பக வனம் ஆகிய இன்னம்பூரில் உள்ள தாந்தோன்றி ஈசனை வழிபட்டு சாபம் நீங்கி ஒரு குளத்தை வெட்டியது. அந்த ஐராவதக் குளம் இந்தக் கோயிலுக்கு முன்னால் இப்பவும் உள்ளது.
சூரியன் ஆற்றல் பெறவேண்டி இத்தலத்து ஈசனை வழிபட்டுபேறு
பெற்றான் என்றும் கூறுவர். அவனுக்கு “இனன்” என்றும் பெயர் உண்டு.
இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால், “இனன் நம்பு ஊர்” என்று
பெயர் ஏற்பட்டு “இன்னம்பூர்” என்று மாறிவிட்டது என்றும் சொல்வார்கள்.
அதற்குச் சான்றாக ஒவ்வொறு ஆண்டும் ஆவணி மாதம் 31ம் தேதியும்,
புரட்டாசி மாதம் 1,2 ஆகிய தேதிகளில் மற்றும் பங்குனி 13,14,15
ஆகிய தேதிகளில்சூரிய கிரணங்கள் இந்த பெருமானின் திருவடிகளில் படும்.
அதுமட்டுமா!!!!
அகத்திய முனிவர் இத்தலத்தை அடைந்த போது, இறைவன் அவருக்கு
தமிழிலக்கணம் உபதேசித்து அருளினார். அதலால் தான் இறைவனுக்கு
”எழுத்தறிநாதர்” என்ற பெயருடன் இத்தலத்தில் அருள் பாலிக்கிறார்.
ஒரு சமயம் சுதன்மன் என்ற அந்தணன் இப்பெருமானை பூசித்து,
நிர்வாகத்தையும் பார்த்து வந்தான்.அப்போது ஆண்டு வந்த மன்னன் தன்
நாட்டிலுள்ள கோயில்களின் வரவு செலவு கணக்குகளைக் கொண்டு வருமாறு எல்லா நிர்வாகிகளுக்கும் ஆணயிட்டான். சுதன்மனும் தன் பொறுப்பிலுள்ள இன்னம்பூர் திருகோயிலின் கணக்கினை மன்னன் முன் காட்டினான்.
மன்னனுக்கு சந்தேகம் வர மறுநாள் மீண்டும் வருமாறு பணீத்தான்.
நேர்மையும் சீலமும் உள்ள சுதன்மன் தான் தோன்றி ஈசனை போற்றிப்
பணிந்தான். இறைவனும் அன்பன் இடுக்கண் களைய தானே சுதன்மன்
வடிவிலே சென்று கணக்கினை வழுவின்றி எடுத்துரைத்தான்.மறுநாள் சுதன்மன் கனவில் தோன்றி நிகழ்ந்ததை எடுத்துரைத்தான். சுதன்மனும் இறைவன் திருவருளை வியந்து போற்றினார்.
அப்பர் பெருமானும் இதனை,
               “எழுதுங்கீழ்கணக்கு இன்னம்பர் ஈசனே”
என்று போற்றி பாடினார்.
   ”சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய்
        முடி பத்துடையான்றனைக் கனிய வூன்றிய காரணம்
     என்கொலோ இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.”
-திருநாவுக்கரசர், தேவாரப்பதிகம்
    இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
         இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
    திருகோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
         தாழ்ந்து இறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே!
    என்னிலாரும் எனக்கினி யாரில்லை
         என்னு லும்மினி யானொரு வன்னுளன்
    என்னு ளேஉயிர்ப் பாயொஉறம் போந்துபுக்
         கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.
                                                                                        திருநாவுக்கரசர்
 ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு
நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் நாக்கில்
எழுதுகிறார்கள்.
இப்படி பெயர் பெற்ற ஊரில் இருந்து வந்தவன் நான் என்பதில் பெருமை
உண்டு.
அது மட்டுமா!!!!!
சிவன் கோயிலுக்கு மேற்கே சென்றால் வீரவல்லி வம்சத்தினர்
திருமலையில் இருந்து கொண்டு வந்த ஸ்ரீனிவாசன் விக்கிரஹத்தை
பிரதிஷ்டை செய்து ஒரு பெருமால் கோயில் கட்டி சமீபத்தில்
கும்பாபிஷேகம் விமரிசையாகச் செய்துள்ளார்கள்.
இந்த ஊரில் நானும் இருந்தேன், அதை இப்போது நினைத்தாலும் மனதில்
குதூகலம் வந்து விடும். எப்போது லீவு விடுவார்கள் என்று நாங்கள் காத்துக்கொண்டிருப்போம். நாங்கள் என்று சொன்னது, தம்பிகள், தங்கைகள், எங்கள் சித்தி மற்றும் எல்லோரும் தான்.
இன்னம்பூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு கிளம்பி விடுவோம்.
வீடுன்னா அது வீடய்யா? முன் பக்கத்திலிருந்து கொல்லைக்கட்டு வரை
ஒரு ஃப்ர்லாங்க் இருக்கும். வாசல் திண்ணை, ரேழி, கம்பிகள் கொண்ட
பெரிய முற்றம், சாமான் வைக்கும் அறை, சமையல் கட்டு, இரண்டாம் கட்டில் கிணறு, கிணற்றில் இருந்து சமைல்கட்டு தொட்டிக்கு நீர் செல்ல ஒரு அமைப்பு, பின்னால் நீண்ட தோட்டம், இப்படி இந்த வீட்டில் உள்ளவர்களைத் தேடவே பத்து நிமிஷம் ஆகும்ன்னா பாத்துக்குங்க, எவ்வளவு பெரிய வீடுன்னு?
வீட்டுலெ சமையல் பண்ணுவது ஒருவர் வேலை, பரிமாருவது மற்றோருவர், தரை துடைப்பது மற்றவர், இப்படி ஒவ்வொருவருக்கும் வேலை கொடுப்பதில் எங்க பாட்டிக்கு நிகர் யாரும் கிடையாது!
பகல் பூரா விளையாட்டு, மாலையில் வீட்டிலேயே நாடகம் போன்று ஏதாவது செய்து பொழுதைப் போக்குவோம். இதுக்கு நடுவிலெ பாட்டியின் வயலுக்குச் சென்று, கரும்புச் சாறு பிழியும் இடத்துக்குச் சென்று சொம்பு நிறைய் இஞ்சி கலந்த சார்றை  போட்டிபோட்டுக்கொண்டு குடிப்பதில் இருக்கும் ஆனந்தம், எழுத்தால் சொல்ல முடியாது. மாலையில் சிவன் கோயிலுக்கு போகும் வழியில் கோணமதகுன்னு ஒண்ணு வரும், அந்த தண்ணிரில் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு குதிப்பதில் உள்ள ஆணந்தம் எத்தனை கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது!

இன்னம்பூர் பெருமாள் கோயில் தல வரலாறு

மார்கழி மாதத்தில் பெருமாள் கோயிலில் காலையில் சுடச்சுட பொஙகல்
கொடுப்பார்கள். அப்பு மாமா என்று பெயர் கொண்டவர், எங்களுக்குச்
சொந்தம்தான், எல்லோரையும் ஒரு பாத்திரம் கொண்டு வருணும்ன்னு
கண்டிப்பாக சொல்லிவிடுவார்.  ஆக எல்லார் கையிலும் ஒரு பாத்திரம்
இருக்கும்ன்னா பாத்துக்குங்க!
பஸ் நிக்கும் இடத்தில் ஒரு சாயபு கடை இருக்கும். அதுதான் அந்த ஊருக்கு ’வால் மார்ட்’. பெரிசுன்னு நினைக்காதிங்க், ஒரு சின்ன குடிசையில் கடை இருக்கும். பாட்டி எங்களை வேலை பாக்கச் சொல்லவேணுங்குறதுக்காக எதையாவது வாங்கி வரச் சொல்லுவாங்க.
கடைக்கார முஸ்லிம் எங்களைப் பார்த்து, “என்ன நீங்கள்ளாம் மண்டை
உடைஞ்ச அய்யர் வீட்டுப் பசங்களா?’ ன்னு கேள்வி கேட்டுட்டு சாமனை
கொடுப்பார்.

ஸ்ரீனிவாசப் பெருமாள்
பெருமாள் வீதிஉலா
ஸ்ரீனிவாசப் பெருமாள் மூலவருடன்
நாங்களும், ‘ஆமாம்’ ,ன்னு சொல்லிட்டு வாங்கி வருவோம், ஆனா இன்னிக்கு வரைக்கும் எங்கள் மூதாதையரில் யாருக்கு எப்போது மண்டை உடைந்ததுன்னு எங்கள் யாருக்குமே தெரியாத ’ஸஸ்பென்ஸ்’.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் எங்கள் ஊர் பெருமையை.
அப்படிப்பட்ட இன்னம்பூரில் ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கு ஒவ்வொரு
சிரவணத்தின் போதும் ஒவ்வொருவர் மண்டகப்படி நடக்கும். பெருமாள்

அக்கிரஹார வீதியில் உலா வருவார், வீட்டின் முன் நின்று அருள் பாலிப்பார்.
பின்னர் கோயிலின் முன் தீபம் ஏற்றுவார்கள், அர்ச்சனை முடிந்து புளியோதரை சுண்டல் பிரசாதம் வினியோகம் ஆகும்.
இந்த மாதச் ச்ரவணம் பாட்டியின் ஆணைப்படி, என்னோடது. போனேன்,
எல்லாம் நடக்கிறது எப்போதும் போல், ஆனால் அக்கிரஹாரத்தில் தான்
பேர் சொல்ல ஒரு பிராமணரைத் தவிர, வெறிச்சோடி, களையிழந்து
நிற்கிறது அக்கிரஹாரம். யாரைக் குறை கூறுவது, என்னையும் சேர்த்துத்தான்!!!
கேள்விபட்டேன், இன்ன்ம்பூரில் பல அடுக்கு ஃப்ளாட் கட்டப்போகிறார்களாம்! ஒரு நல்ல் ஊர் சிதைக்கபட இருக்கிறது!!!!!!!
எங்கிருக்கு இன்னம்பூர்?
கும்பகோணம்-ஸ்வாமிமலை செல்லும் பாதையில், புளியஞ்சேரியில் இறங்கி ரெண்டு கிலோமீட்டர் நடந்தால் இன்னம்பூர் வந்துவிடும்.
கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் 6ம் நம்பர் பஸ் திருபிறம்பியம் பஸ்ஸில்
இன்னம்பூர் என்று கேட்டு இறங்கிக் கொள்ளலாம்.
சிவனடியார்கள் எல்லாரும் பார்க்க வேண்டிய இடம், ஒரு முறை தான்
பார்த்து விட்டு வாருங்களேன்!!!!
இன்னம்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேக காட்சிகளின் வீடியோ லின்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
http://www.youtube.com/watch?v=iD_4
4If5aNc