வெள்ளி, ஆகஸ்ட் 2

கதை சொல்லும் பாசுரங்கள்----பகுதி-2


கதை சொல்லும் பாசுரங்கள்----பகுதி-2
”என்ன தாத்தா ரொம்ப நாளாச்சு கதை சொல்லி? எப்ப சொல்லபோறே?”
“ஒன்னுமில்லை கண்ணா, நிறைய வேலை இருந்தனாலே உனக்கு கதை சொல்லமுடியலயடா. மன்னிச்சுக்கோ. என்ன சரியா?”
“அதெல்லாம் சரி, இன்னைக்கு என்ன கதை சொல்லப்போறே?”
“போன தடவை என்ன கதை சொன்னேன் ஞாபகம் இருக்கா?”
“ஏன் இல்லாம, கிருஷ்ணன் அதான் கண்ணன் எப்படி பொறந்தான்னு சொன்ன. எப்படி மறக்க முடியும்.”
“சபாஷ்டா, நல்லா ஞாபகம் வச்சு இருக்கியே.”
“நாலாயிர திவ்யப் பிரபந்தம், அப்ப்டிங்கறது நிறைய பாடல்கள் ஆழ்வார்கள் பெருமாளைப் பற்றிப் பாடி இருக்கற ஒரு நூல்.. ஒவ்வொரு பாட்லகளிளேயும் நிறைய கதைகள் இருக்கு. அதில் இருந்து தான்
உனக்குக் கதை சொல்லிண்டு இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?”
“தெரியும் தாத்தா. போன தடவை ஆண்டாள்  பாடலை வச்சு கதை சொன்னே. இப்ப யாரோட பாட்டை வச்சு கதை சொல்லப் போற.”
”இன்னைக்கு திருமழிசை என்கிற ஊரில் இருந்து பாடல்கள் இயற்றிய திருமழிசையாழ்வார் பற்றிய கதை தான் உனக்குச் சொல்லப் போறேன்”
“எங்கே தாத்தா இருக்கு அந்த ஊர்?”
“சென்னைக்கு பக்கத்திலெ, திருவள்ளூர் போற வழியிலே இருக்கு திருமழிசை. அவர் ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் அவருடைய சிஷ்யன் கணிகண்ணன் என்பரோடு திருவெஃகா என்ற இடத்தில் பெருமானைப் தரிசித்துக் கொண்டு தங்கி இருந்த்தார்."
"அவர் என்ன செய்தார் தாத்தா?”
”திருமழிசையாழ்வார் கோயிலில் தங்கி பெருமாளுக்கு தொண்டு செய்து கொண்டு இருக்கும் போது, ஒரு வயதான  மூதாட்டியும் ஆழ்வாருக்கு துணை செய்தார். இதைப் பார்த்த ஆழ்வார்,
 ”உனக்கு என்ன வரம் வேண்டும்”, என்று கேட்டார்.
மூதாட்டி, “எனக்கு ஏதானும் வரம் கொடுப்பதா இருந்தா, எல்லாரும் என்னௌடைய வயதான தோற்றத்தைக் கண்டு கேலி செய்கிறார்கள், அதனால் நான் என்றும் மாறாத இளமை தோற்றத்தை எனக்குத் தர வேண்டும்”, என்று மன்றாடினாள்.
”அவ்வாறே ஆகட்டும்” என்று ஆழ்வாரும் அவரை இள்ம் பெண்ணாக மாற்றினார்.
“முடியுமா தாத்தா?”
“இது மட்டுமா முடியும். ஆழ்வார் பெருமாளோடே பேசி இருக்கார்”.
’அப்படியா தாத்தா”.
“ஆமாம்ப்பா, அந்தக் கதை இப்போ வரப்போறது”.
“சொல்லு தாத்தா”.
“அந்த ஊர்ல இருந்த பல்லவ ராஜா இந்தப் பெண்ணைப் பார்த்து, அவளைக் கல்யாணம் செய்து கொள்ள விருப்ப்பட்டான்.
அவளும் சரி என்று சொல்ல கலயாணம் இருவருக்கும் நடைப்ற்றது. வருஷம் ஆச்சு. ராஜா முதுமை அடைந்தார். ஆனா ராணி எப்போவும் போல இளமையாகவே இருந்தார். இதைக் கண்ட ராஜா ராணி கிட்ட,
“எப்படி நீ மட்டும் இளமையாக இருக்கே?’ ன்னு கேட்டார்.
ராணி, ” நான் இளமையாக இருக்கக் காரணம் திருமழிசையாழ்வார் தான்” என்று அவருடைய பெருமையைச் சொன்னாள்.
உடனே ராஜா, தன்னுடைய ஆட்களை அனுப்பி, ஆழ்வாரை வரச் சொன்னான். ஆழ்வார் வரமாட்டேன்னுட்டார். அவருடைய சிஷ்யன் கணிகண்ணனை வரச் சொன்னான். அவரிடம் ராஜா,
 “ என்னைப் புகழ்ந்து உன் குடுனாதார் பாடவேண்டும்”, என்று கேட்டான்.
ஆனா சிஷ்யன் கணிகண்ணன்,
“பெருமாளைத் தவிர வேறு எவரையும் பற்றி எம் குருநாதர் பாடமாட்டார்” என்றான்.
“அப்படின்னா நீ என்னைப் புகழ்ந்து பாடு”, என்று கணிகண்ணனுக்கு ஆணையிட்டான்.
”எம் குருநாதரை தவிர்த்து நான் யாரையும் பாட்மாட்டேன்” என்று ராஜாகிட்ட சொன்னான்.
“இப்படியெல்லாம் ராஜாகிட்ட சொல்ல முடியுமா, தாத்தா?”
“நாமன்ன ராஜாவைப் பார்த்து பயப்படுவோம், ஆனா அந்தக் காலத்திலெ யாரும் பயப்படமாட்டாங்க.”
“அப்ப என்ன ஆச்சு தாத்தா?”
”ராஜாவுக்கு கோபம் வந்துச்சு. கணிகண்ணை நாட்டை விட்டுச் செல்லும் படி உத்தரவிட்டான். கணிகண்ணனும் குருகிட்ட நடந்த விஷயத்தைச் சொல்லிட்டு, தான் திருவெஃகாவைவிட்டு செல்வதற்க்கு அனுமதிகேட்டான். திருமழிசையாழ்வார் உடனே, “சிஷயன் இல்லாத இடத்தில் எனக்கென்ன வேலை, நானும் உன்னோட வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு புறப்படத் தயாரானார். அதுக்கு முன்னாலெ,
பெருமான் கிட்ட,
              "கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
                மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
          செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
                பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"
என்று பாடினார் திருமழிசையாழ்வார்.”
“பெருமாள் கிட்ட என்ன சொன்னார் தாத்தா?”
“காஞ்சி மணிவண்ணா, கனிகண்ணன் ஊரை விட்டுப் போகின்றான், நானும் அவனோடே போகின்றேன், அதனாலே
நீயும் உன்னோட நாகபாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு என்னோட புறப்படு. அப்படின்னு அர்த்தம்”
“ஆழ்வார் சொன்னா பெருமாள் கேட்பாரா தாத்தா?”
“கேட்டாரே”.
“ஆமாம், உடனே பெருமாள் நாகப்பாயை சுருட்டிண்டு, மூன்று பேரும் ஊரை விட்டு ”ஓரிக்கை” என்ற ஊரில் போய் அன்னைக்கு இரவு தங்கினார்கள்.”
“அப்புறம் என்ன ஆச்சு தாத்தா?”
“காஞ்சிபுரம், பெருமாள் இல்லாததால் பொலிவை இழந்தது. விஷ்யம் என்னன்னு ராஜா வேலையாட்கள் கிட்ட கேட்டான்
மறுநாள் ராஜாவோட வேலையாட்கள் நடந்த விஷயத்தை ராஜாக்கிட்ட சொன்னாங்க. உடனே ராஜா தான் பண்ண தப்ப உணர்ந்தான். போய் ஆழ்வார் கிட்ட மன்னிப்பு கேட்டான், உடனே காஞ்சிபுரம் வரணும்ன்னு சொன்னான். ஆழ்வாரும் ராஜாங்கிறது பெருமாள் மாதிரின்னு சொல்லிட்டு, உடனே கிளம்பினார். பெருமாளைப் பார்த்து, 
                    "கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
                          மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
              செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
                        நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"
“கனிகண்ணனும் நானும் காஞ்சி போறோம், அதனாலே நீயும் பாயைச் சுருட்டிக் கொண்டு புறப்படடு கோயில்ல
போய் படுத்துக் கொள்” என்று சொன்னவுடன் பெருமாளும் பாம்பு படுக்கையை எடுத்துக் கொண்டு வந்து, மீண்டும்
கோயில்லெ போய் படுத்துக்கொண்டார். அதனால அந்த பெருமாளுக்கு “சொன்னவண்ணம் செய்த பெருமாள்” ன்னு
பேரு. “யதோத்காரி” ன்னும் கூப்பிடுவாங்க.”
“என்ன தாத்தா, பெருமாள் ஆழ்வார் சொல்றதல்லாம் கேட்டு இருக்காரே!!”
“ஆமாம், அந்தக் காலத்திலே மட்டுமில்ல, எப்பவும் பெருமாள் நாம் சரியாச் சொன்னா எப்பவும் கேட்கத் தயார். நான் முன்னாடி சொன்ன மாதிரி இப்ப செல்ல வச்சுண்டு விளயாடுறியா?”
“இல்ல தாத்தா, இப்பல்லாம் நான் நன்னாப் படிக்கிறேன்”.
“வெரிகுட், அப்படித்தான் இருக்கணும். சரி போய் தூங்கு, நாளைக்கு இன்னொரு பாட்டுக்கு கதை சொல்றேன்,”
“தாங்க்ஸ் தாத்தா, குட் நைட்”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக