வெள்ளி, பிப்ரவரி 2

ராமானுஜா அனு யாத்திரை: பூரி நான்காம் பகுதி. கொடியேற்றம்

ராமானுஜா அனு யாத்திரை: பூரி நான்காம் பகுதி. கொடியேற்றம் 
சென்ற பகுதிகளில் பூரி ஜெகன்னாதர் ஷேத்ரம் பற்றி விரிவாப் பார்த்தோம். உலகப் பிரசித்தி பெற்ற ரத யாத்திரை, பிரசாத மகிமை போன்றவைகள் விஷேஷம். 
அடுத்து மற்றொரு முக்கியமானது கொடியேற்றம்.
ஆம், ஜென்னாதரின் விமான கோபுரம் 214 அடி உயரமாம். அதன் மேல நீல சக்கரம் என்று பெயர் பெற்ற சுதர்சன சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சுற்றளவு மட்டும் 36 அடியாம். எட்டு உலோகங்களால் ஆனதாம். இதன் மேல சிவப்பு, மஞ்சள், வெள்ளை வண்ணத்தில் எப்போதும் பறந்துகொண்டிருக்கும்.
தினமும் மாலை 6.30 மணி அளவில், கருட சேவகர்கள் என்று சொல்லப்படும் பரம்பரையில் வந்தவர்களில் ஒருவர், அனைத்து கொடிகளையும் சுமந்து கொண்டு, கோபுரத்தில் எந்த யந்திரத்தின் உதவியும் இல்லாமல், 15 நிமிஷங்களில் பணிகளில் ஏறி, அடுத்த 10 நிமிஷத்தில் கட்டிவிடுவார். அதனை தரிசிக்க பக்தர்கள் திரண்டு இருப்பார்கள் என்றால் பாரத்துக்கொள்ளுங்கள். 

கனத்த மழை, சூறாவளி அடித்தாலும் கொடி கட்டும் நிகழ்ச்சி தடைபட்டது கிடையாதாம். இதற்காக 8 வயது முதற்கொண்டு பரம்பரையில் வந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுமாம்.
ஆக ரத யாத்திரை, பிரசாதம், கொடியேற்றம் போன்ற இத்துணை விஷேஷம் கொண்ட பூரி ஷேத்ரம், நிறைய கோயிலகளைக் கொண்டது. இதில் முக்கியமானது 
குண்டிஸா மந்திர். 
இது கிராண்ட் ரோட்டின் முற்பகுதியில் உள்ளது. இங்கு தான் முதன் முதலில் தாரு ப்ரம்ஹத்தில் இருந்து ஜகன்னாதர் மற்றும் பல விக்கிரஹங்கள் உண்டாக்கப்பட்டதால், பகவானின் பிறப்பிடம் இது என்று சொல்லலாம். ரதோஸ்தவத்தின் போது எல்லா பெருமாளும் இங்கு தான் எழுந்தருளியிருப்பர். 
ஸாக்‌ஷி கோபால் மந்திர். 

சாக்ஷி கோபால் மந்திர்




சாக்ஷி கோபால் மந்திர் 

ஜகன்னாதர் சந்நிதியில் இருந்து மேற்கே 15 மைல் தொலைவில் உள்ளது, கண்ணணின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள இவரும் வ்ருந்தாவனத்தில் இருக்கும் மதன மோகனரும். இவர் முதலில் ப்ரதான கோயிலில் தான் இருந்தார். அனைத்து ப்ரசாதங்களையும் ஜகன்னாதருக்கு முன்னமயே உண்டு முடித்துவுடுவாராம். எனவே இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டு, அதன் முடிவில் ஊருக்கு வெளியே இங்கு வந்து கோயில் கொண்டுள்ளார் என்பது ஐதீகம்.
கலயாணத்துக்கு சாட்சி சொன்னதாக கதை ஒன்று உண்டு. 
ஒரு அந்தண இளைஞனுக்கு தன்பெண்ணைக் கொடுக்க இசைந்தார் ஒரு முதியவர். பின்னால் பண விவஹாரத்தால் மறுத்து விட்டாராம். அந்த இளைஞன், இவரின் பக்தர். இவரிடம் மன்றாடி கேட்டதின் பேரில், மக்கள் மன்றத்தில் வந்து சாட்சி சொல்லியிருக்கிறார். கல்யாணம் நன்கு நடந்தது.அன்றுமுதல் இவர் சாட்சி கோபால் என்று அழைக்கப்படுகிறார்.

பூரி ஷேத்திரத்துக்கு வந்தோம் என்பதை இவரைப்பாரத்து சொல்லிவிட்டு வரவேண்டுமாம்.
இப்படி இன்னும் பல கோயில்கள் இங்கு உள்ளன. ஒரு வாரம் இங்கு இருந்து எல்லா இடங்களையும் சேமிக்க வேண்டும்.
இப்படி ஊரப்பத்தி சொல்லி வந்ததில், ஜகன்னாதரை சன்னதி திறந்து அவரை  சேவித்து விட்டு வெளியே வந்த பிறகு என்ன நடந்தது என்பதை சொல்ல மறந்துட்டேனே!!!!
ஏற்கனவே மழை பிச்சுவாங்கி கொண்டு இருந்ததுன்னு சொன்னேன் அல்லவா?
நானும் என் நண்பரும் வெளியே வந்து, எங்கள் நண்பர்கள் வந்துவிடுவாரகள் என்ற நம்பிக்கையில், மழையில் நனைத்து கொண்டே, தங்குவதற்கு இடம் இல்லாததால், நின்று கொண்டே இருந்தோம். அவர்கள் வெளியே வருவதாகத் தெரியவில்லை.
கிட்டத்தட்ட அரை பணி ஆகியிருக்கும். ஆண்டாள் அரங்கனுடன் ஐக்கியமானது போல இவர்களும் ஐக்கியமாகிவிட்டாரகளோ என்று நினைக்கும் சமயத்தில், ஒருவழியா எல்லோரும் வெளியேவந்தாரகள். மழையும் விட்டு தூறிக்கொண்டு இருந்தது.
எல்லா சன்னிதிகளையும் சேவித்து விட்டு வெளியே வந்தோம். முன்னேற ஜகன்னாதர் சமையல் கட்டைப்பற்றி கேள்விப்பட்டு இருந்தபடியால், அந்த வாசற்படிய நோக்கி பயணமானோம். அருகில் தான் இருந்தது. உள்ளே நுழைய கட்டணம் உண்டு. கேள்வி பட்ட மாதிரியே பெரிய சமையல்கூடம் தான்.


அசந்துவிட்டோம். மழை முழுதும் நின்று விட்டதால், வெளியே வந்து கடைகளை நோட்டம் விட்டோம். வேண்டியத வாங்கினோம். தங்கிய அறைக்கு வந்து அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தோம்.
அருகிலேயே சூர்யனின் கோயில் இருப்பதை கேள்விப்பட்டு, இங்கிருந்து அங்கு செல்ல ஒரு வாடகைக் காரை ஏற்பாடு செய்து கொண்டோம்.
20 மைல்கல் தொலைவில் SUN TEMPLE எனப்படும் KONARK உள்ளது.
என்ன என்ன பாரத்தீரகள் அங்கு?
அடுத்த பகுதியில்,!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக